மகளிர் தினத்தைக் கொண்டாடிய தலைவர்கள், சிபிஎம் கேரள மாநாட்டுப் பிரதிநிதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது கேரள மாநில மாநாடு வியாழனன்று கொல்லத்தில் துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன் பிரதிநிதிகள் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். மாநாட்டு நகரின் (கொடியேரி பாலகிருஷ்ணன் நகர்) அருகே உள்ள வீ பார்க்கில் இருந்து மாநாட்டு நகர் வரை பேரணியாகச் சென்று பிரதிநிதிகள் மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி, மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.கே.ஸ்ரீமதி, கே.கே.ஷைலஜா, சி.எஸ்.சுஜாதா, கேரள மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜே.மெர்சிகுட்டியம்மா மற்றும் சூசன் கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.