கவிஞர் நந்தலாலா உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை
தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத் தின் பொதுக் குழு உறுப்பினரு மான கவிஞர் நந்தலாலா (69) செவ்வாயன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கால மானார். இந்தியன் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத் தில் பட்டிமன்றப் பேச்சாளராக இயங்கி வந்தார். மதச்சார்பற்ற – பகுத்தறிவு சார்ந்த இடதுசாரி கருத் தியலை வலுவாக முன்னெடுத்த வர். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசி யல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் நந்தலாலாவின் உடலுக்கு, புதனன்று தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக் கூர் ராமலிங்கம், பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங் கடேசன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வியாழ னன்று காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி - புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெறு கிறது.