tamilnadu

img

வியட்நாம் புரட்சியின் தலைவர்!

1929 மே மாதம் ஹாங்காங் நகரில் நடந்த கூட்டத் தில், இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி யை தோற்றுவிக்க திட்டமிட்டனர். 1930 பிப்ரவரி 3 அன்று கட்சியை நிறுவுவதற்கு தலைமையேற்றார் ஹோ. அப்போது, வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத் தது. 1930 அக்டோபருக்கு  பின், சோவியத்தின்  ஆலோசனையை  ஏற்று, இதற்கு இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிட்டார் ஹோ. 1938 இல் சீனாவுக்கு திரும்பிய ஹோ, சில மாதங்கள் மா  சேதுங்குடன் தங்கினார். இந்நிலையில் 1940 ஆம் ஆண்டு ஜெர்மனி பிரான்சை தோற்கடித்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவதற்கு திட்டமிட்டனர் ஹோ  மற்றும் சக தோழர்கள். இச்சமயத்தில் இருந்துதான் ஹோ சி மின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 1945ல் “எல்லா மனிதர்களும் சமமாகப் பிறந்தவர்கள்; இயற்கை நமக்கு மீற முடியாத உரிமைகளையும், வாழ்க்கை யையும் வழங்கியுள்ளது” என்ற வரிகளை குறிப்பிட்டு, செப்டம்பர் 2 அன்று, பா டின் பகுதியில் ஹோ சி மின் வியட்நாமின் சுதந்திரத்தை அறிவித்தார். பின்னர் 1946, 1954 காலகட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது இந்தோசீனப் போர்கள் நடைபெற்றன.  20 ஆம் நூற்றாண்டின் புரட்சியாளர்களில், பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் காலனித்துவ அமைப்புக்கு எதிராக ஹோ மிக நீண்ட போரை நடத்தினார். உலகின் வலிமைமிக்க நாடான அமெரிக்காவை தோற்கடித்து, பின்வாங்கச் செய்தார். வட, தென் வியட்நாமை ஒருங்கிணைத்து ஒரே நாடாக்கினார். ஒரு மார்க்சிஸ்டாக, 1960களில் வளர்ந்த கம்யூனிசத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹோ-சி-மின், 1969 செப்டம்பர் 2 அன்று இதய பாதிப்பு காரணமாக ஹனோய் நகரில் காலமானார். ஹோ சி மின் வியட்நாமிய கம்யூனிசத்தின் நிறுவனர் மட்டுமல்ல; புரட்சியின் தலைவராகவும், வியட்நாம் சுதந்திரத்தின் சின்னமாகவும் திகழ்ந்தார். இவரது எளிமை, நேர்மை மற்றும் உறுதி ஆகிய குணங்கள் வியட்நாமில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் போற்றப்படுகின்றன.

இன்று தோழர் ஹோ-சி-மின் நினைவு நாள்