சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் நிதி 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ராமநாதபுரம் முருகப்பா குளம் அருகில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பொறியாளர் கோதண்டம், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், ஆர்.கருணாநிதி. அலமேலு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.