tamilnadu

img

சட்டமும் நீதியும் யாருக்காக? - ஆர்.வேல்முருகன்

குடி உயரக்கோல் உயரும் என்பார்கள். ஆனால், குடியை அழித்து அதன் மீது ஆட்சி நடத்துவது மக்களா ட்சிக்கு அழகல்ல. அரசு, அதிகாரிகள், நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம் இவையனைத்தும் நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பாதுகாப்பதற்கும் மேம்ப டுத்துவதற்குதான். மாறாக, மக்களை அழித்தொழிப்பதாக இருக்குமானால் அது அரசு அல்ல அதற்கு பெயர் வேறு... 2022 மே மாதம் 8 ஆம் தேதி மயிலா ப்பூர் தொகுதி, ராஜா அண்ணாமலை புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் பெரிய புல்டோசர்களுடன் ஆயிரக்கணக்கில் காவல்துறை, நூற்று கணக்கான அதிகாரிகள் குவிக்கப் பட்டனர். அங்குள்ள மக்களின் அலறல் சென்னை நகர மக்களை உலுக்கியது. அது ஆட்சியாளர்களுக்கு மட்டும் சங் கீதமாக இருந்ததா என்னவோ தெரிய வில்லை.

நீர்வழிக் கரையோரம் உள்ள இளங்கோ தெருவில் உள்ள 625 வீடுகளை இடிக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு ராஜீவ் ராய் எனும் ரியல் எஸ்டேட் முதலாளி போட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வருகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அந்தப் பகுதியை அளந்து 366 வீடுகள் மட்டுமே பக்கிங் காம் கால்வாய் தெற்கு கரையில் உள்ளது. எஞ்சிய 259 வீடுகள் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என அறிக்கை கொடுத்தது. இதன்படி, 2014 ஆம் ஆண்டு 366 வீடு களை இடித்து தரைமட்டமாக்கி விட்ட னர். எஞ்சிய 259 வீடுகளையும் இடிக்க வேண்டும் என ராஜீவ்ராய் உச்சநீதி மன்றத்திற்கு போகிறார். அப்போது (2019 ஆம் ஆண்டு) தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராக இருந்த தர்மேந்திர பிரதாப் ஐஏஎஸ், இந்த இடம் 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறி விக்கப்பட்ட குடிசைப்பகுதி என்பதை சுட்டிக்காட்டினார். அதன்பிறகும், 259 வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் உத் தரவிட்டது. இதனை எதிர்த்து மாண வர்களும், மக்களும் போராட்டம் நடத்தி னர். இதனையும் மீறி குடியிருப்புகளை தரைமட்டமாக்குகின்றனர். இதனை பொறுக்காமல் கண்ணையன் என்பவர் அதே இடத்தில் பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக் கொள்கிறார். உடல் வெந்து தோல் உறிந்து தொங்கு கிற அந்த நிலையிலும் `இந்த ஊமை மக்களை காப்பாற்றுங்கள்’ என உயிர் துறக்கிறார். செத்தவன் ஏழை என்பதால் நிவாரணமாக 10 லட்சத்தை அரசு அறிவித்துவிட்டு, மீண்டும் அந்த வீடுகளை இடித்திடவே துடிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், படப்பையை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் நரியம் பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 300 எக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வெளி யேற்ற ஒரே வாரத்தில் வருவாய் துறை இரண்டு முறை நோட்டீஸ் கொடுக் கிறது. தூத்துக்குடியில் இருந்து வாழ்வு தேடி வந்து, உழைத்து சேமித்த பணத்தில் நரியம்பாக்கம் கிராமத்தில் இடத்தை வாங்கி, வீட்டை கட்டி முடிக் கும் நிலையில் வருவாய்த் துறை கொடுத்த நோட்டீசால் பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். கனவுக் கோட்டை கண் முன்னே இடிக்கப் போகிறார் களே என்ற மன உளைச்சலால் தன்னை த்தானே மாய்த்துக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ளது தந்தை பெரியர் நகர். அந்தப்பகுதி ஆக்கிரமிப்பு என்று சிவ காசி முதலாளிகள், வரி செலுத்துவோர் சங்கம் என்ற பெயரில் பொதுநல வழக்கு தாக்கல் செய்கின்றனர். ஏரியை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் கட்டி இருப்பதாக நீதிமன்றத்திற்கு தவ றான தகவல்களை கொடுத்தனர். நீதி மன்றமும் அந்த பகுதியை அகற்ற உத்தரவிட்டது. அப்போது முதலமைச் சராக இருந்த ஜெயலலிதா, விடியற் காலையிலேயே குடியிருப்புகளை இடித்து தள்ள உத்தரவிட்டார்.

கண்முன்னே வீடுகள் இடிக்கப்படு வதை தடுக்க முடியாமல் மனம் உடைந்த ஆட்டோ தொழிலாளி முத்துக்குமார் வீட்டின் மீது ஏறி பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக் கொண்டார். அங்கிருந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போதும் மனம் பதறா மல் ஆட்சியாளர்கள் மொத்த வீட்டை யும் இடித்து நிம்மதி பெருமூச்சு விட்ட னர்.

ஆக்கிரமிப்பு என்று வழக்கு போட்டு எந்த முதலாளிகள் வீடுகளை இடிக்க வைத்தார்காளோ, அந்த இடத்தில் தங்களது நூற்றுக்கணக்கான லாரி களை நிறுத்தும் இடமாக மாற்றி யுள்ளனர். ஆக்கிரமிப்பு என்று கூறிய இடத்தை அரசு ஏன் மீண்டும் நீர் நிலை யாக மாற்றவில்லை?

சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட்டு தமிழகம் முழு வதும் தற்போது இடிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வீடுகள் இருந்த இடம் பிறகு பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்பாக மாற்றி ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு மடை மாற்றம் செய்யப் போகிறார்களா?

நீதிமன்றமும் - நிர்வாகமும்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீர்நிலைகள் அதிகமாக ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை நீதிமன்றம் செய்துள் ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் நகர்மயமாதல் அதிகமாக உள்ளது. தமிழக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நகரங்களில் வாழ்கின்றனர். நகரத்தில் கால்நடைகள் வளர்க்க தடை உள்ளது. கால்நடைகள் வளர்க்க  முடியாத சென்னை போன்ற பெருநகர ங்களில் மேய்ச்சல் வகை நிலங்கள் எதற்கு? இந்த நிலங்களை வகை மாற்றி அறிவிக்கக் கூடாது என நீதி மன்றம் சொன்னால் அதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டாமா? எந்த நிலத்தையும் வகை மாற்றம் செய்ய அரசுக்கு உரிமை இல்லை என நீதி மன்றம் மிரட்டுகிறது. அரசும் கைகட்டி மவுனம் காக்கிறது. சட்டமும் நீதியும் மக்களுக்குத்தானே தவிர சில கார்ப்ப ரேட்டுகளுக்கு அல்ல.

ஏரி என்றால், அங்கு தண்ணீர் வரு வதற்கான வருவாய் கால்வாய், ஏரி நிரம்பினால் நீர் வெளியேறும் கலுங்கல் (ஓடை), மதகுகள் இருக்க வேண்டும். இவை எதுவுமே இப்போது இல்லை. அதுமட்டுமின்றி ஏரியை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் நகர்மயமாதலால் குடியிருப்புகளாக மாறிவிட்டன. நீர்வரத்து கால்வாய் பெரிய பெரிய கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. இப்படி எதுவுமே இல்லாத இந்த ஏரிக்கு நீர்வரத்துக்கான ஆதாரம் என்ன? நிரம்பிய நீர் வெளியேற என்ன வழி? எதுவுமே கிடையாது. அப்படி இருக்க, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளை எப்படி பழைய முறைபடி அணுக முடியும்? இதுவரை ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்ட பகுதி கள் மீண்டும் நீர்நிலைகளாக மாற்றப் பட்டுள்ளதா? அப்படியோ அறிவியல் பூர்வமாக நீர்நிலையாக மாற்ற முடியு மா? பெரும் நிறுவனங்களுக்கு ஏரியை, ஆற்றை பட்டா போட்டு கொடுத்த போது அமைதியாக வேடிக்கை பார்த்த நீதித்துறை ஏழை மக்களுக்கு மட்டும் வகை மாற்றி பட்டா கொடுக்கக் கூடாது. அப்படி வகை மாற்றினால் தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு அழை ப்போம் என மிரட்டுகிறது. அப்படி யென்றால் பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் நீதியா? நீதிமன்றம் நேர்மை யாக செயல்படுகிறது என்றால் ஏரியை, ஆற்றை பெரிய நிறுவனங்களுக்கு வகை மாற்றி பட்டா போட்டுக் கொடு த்ததை தானாக முன்வந்து விசார ணைக்கு எடுக்கலாமே. ஏன் எடுக்க வில்லை?

வீடற்றவர்களாக ..

தமிழகத்தில், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, மேய்க்கால் புறம் போக்கு, அனாதினம், சமய நிலங்கள், பாதுகாப்புத்துறை, பல்கலைக் கழக இடம், வனத்துறை இடம், கழுவெளி, சதுப்பு நிலம், கால்வாய் கரையோரம், ரயில்வே நிலம், தனியார் நிலம் மற்றும் அரசின் பலவகை புறம்போக்கு நிலங்க ளில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் வசிக் கின்றன. மூன்று நான்கு தலைமுறை களாகவும், பல பத்தாண்டுகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். 40, 50 ஆண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து, அந்த இடங்களை மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியானதாக மாற்றியுள்ளனர். கொஞ்சம் கொஞ்மாக சேமித்து கட்டிய அந்த சொத்து மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படி பல கோடி ரூபாய் பெருமானம் உள்ளது. அரசாங்கம் அந்த வீட்டை இடித்து விட்டு தமிழ்நாடு நகர் ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 300 சதுர அடி கூட இல்லாத ஒரு வீட்டை கொடுக்கிறது. அதற்கும் பணம் கட்ட வேண்டும் என்கிறது. இடிக்கப்பட்ட இடத்திற்கு எந்த நிவாரணமும் வழங்க மாட்டோம் என்பது நியாயமா?

வீடுகள் அகற்றப்பட்ட இடங் களை என்ன செய்ய போகிறீர்கள்? சிவ காசியில் தந்தை பெரியார் நகர் வழக்கை போன்ற முதலாளிகளுக்கு அந்த இடத்தை தாரை வார்த்த தைப்போன்று இந்த இடங்களை வழங்கப் போகிறீர்களா? வல்லூறுகள் கோழிக் குஞ்சை தூக்குவதை போல் இல்லாமல் குஞ்சுகளை பாதுகாக்கும் கோழியை போல் மக்களை அரசு பாது காக்க வேண்டும். சென்னை உள்ளிட்டு தமிழகம் முழு வதும் நீண்ட காலமாக புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். பயன்பாட்டை இழந்த, மக்கள் வசிக்கும் நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் (ஜூன் 2) அன்று தாம்பரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டா கோரிக்கை மாநாட்டை நடத்துகிறது. இதற்கு அனைத்து தரப்பு மக்களுக் கும் ஆதரவு தருவதோடு, பெருமள வில் மாநாட்டில் பங்கேற்க அழைக்கி றோம்.