tamilnadu

img

புதிய பாதைகளை உருவாக்கு!

பெண்ணே!
சிம்புட் பறவையாய் சிறகை விரி!
இந்த பரந்த வானில்
உன்னை எட்டிப்பிடிக்க யாருமில்லை!
கைவிலங்கு உடைத்து வெளியே வா!
கடிவாளம் இடாதே உன் கனவுகளுக்கு
புதிய பாதைகளை உருவாக்கு
எட்டுத் திசை முட்டும் வரை!
உன் புரட்சி அலைகள் தொடர
விண்ணைத்தாண்டிய வண்ணச்சிட்டாய்ப் பற!
பார் முழுவதும் உன் புகழ் பரவ,
அவமானங்களை தகர்த்தெறி!
விதையாய் உன் முயற்சி இருக்க,
ஏணியை உச்சியை நோக்கிப் போடு!
உன்னை தாழ்வாக நினைத்தால்
அது அவர்களின் பலவீனம்!
ஆணுக்கு நிகராய் நீ இருக்க
அகிலத்தை ஆள எழுந்து வா!
சுதந்திரக் காற்றை மூச்சாகக் கொண்டு
நீ பேதை இல்லை மேதை என்று எழுதிட வா!

சீ. இர. ரேணுகா காந்தி, 
இரண்டாம் ஆண்டு, இளங்கலை வரலாறு, அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை,