tamilnadu

img

சிபிஎம் வடசென்னை மாவட்ட செயலாளராக எல்.சுந்தர்ராஜன் தேர்வு

ஆவடி, டிச. 28 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட 23ஆவது மாநாடு டிச. 26, 27 ஆகிய தேதிகளில் ஆவடி திருமுல்லைவாய லில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார்.  மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசினார்.  மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பேசினார். மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செய லாளராக எல்.சுந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.  மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக  எஸ்.கே. மகேந்திரன், டி.கே.சண் முகம், எம்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயராமன், வி. ஜானகிராமன், ஆர்.லோக நாதன், அ.விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஸ்குமார், எம். பூபாலன், பா.சரவண தமிழன், எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் உட்பட  37 மாவ ட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

நாட்டில் மொத்த தொழில் உற்பத்தியில் 45 சதமும், ஏற்றுமதியில் 48 சதமும், வேலைவாய்ப்பில் 40 சதமும் தந்திடும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும், அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, வடசென்னையில் நூலகம் மற்றும் கலையரங்கம் அமை க்க வேண்டும், மெட்ரோ ரயில் சேவையை வட சென்னை முழுவதும் இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். திரு நின்றவூரில் இருந்து திரு மங்கலம் வரை மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்மி டிப்பூண்டி வரை புறநகர் ரயில்களுக்கென்று தனிப் பாதையை உருவாக்கி கூடுத லாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலை உத்தர வாதத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.