இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் (SGFI) சார்பாக தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான தமிழ்நாடு அணி தேர்வு மதுரை மற்றும் ஈரோட்டில் நடைபெற்றன. தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக தேர்வு பெற்றுள்ள மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள், ஏ.சயானா, கே.ஆர்.ஏ. ரிஷ்வந்த், பி.மிதுன் பிரபு, கே.ஆர்.ஏ. ரித்விக், பி.பவஸ்ரீ ஆகியோரை சி.இ.ஓ.ஏ.கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர் இராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத் தலைவர் சௌந்தரபாண்டி, முதன்மை முதல்வர் கலா, முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி இயக்குநர் செல்லமுருகன் ஆகியோர் பாராட்டினர்.