சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
பொன்னமராவதி, மே 18- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பாஸ்கரின் மகள் பி. சிவரஞ்சினி மற்றும் ஒன்றிய் குழு உறுப்பினர் லதாவின் மகள், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் ஐந்தாவது மாணவியாக தேர்ச்சி பெற்ற சுதா ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம். ராமசாமி மற்றும் வாலிபர் சங்கம் சரவணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.