tamilnadu

img

கிருஷ்ணகிரி : தாலியோடு பள்ளிக்கு வந்த சிறுமி பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பிப். 12- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஒரு  அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தாலியுடன் வகுப்பறைக்கு வந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்து சமூக நலத்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக சமூக  நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசார ணையில், தாலியோடு பள்ளிக்கு வந்த சிறுமி  கடந்த வாரம் தனது தோழி களிடம் திருவிழாவுக்காக புதிய உடை வாங்குவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திங்கள்கிழமை தாலி கட்டிய படியே பள்ளி சீருடையில் பள்ளிக்கு வந்துள்ளார். இதுகுறித்து தோழிகள் கேட்ட போது தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதை சிறுமி தெரிவித்துள் ளார். விஷயம் ஆசிரியருக்கு தெரிய வந்த பின்பே காவேரிப்பட்டினம் அருகே பாலுப்பள்ளி கோவிலில் நள்ளிரவில் தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதை சிறுமி கூறி யுள்ளார். உடனடியாக ஆசிரியர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்துள் ளார். 

திங்கள்கிழமை இரவு சமூக நலத்துறை அதிகாரி கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட 25 வயது இளைஞர், அவரது பெற்றோர் உள்ளிட்ட 5  பேருக்கு எதிராக குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

செவ்வாய்கிழமை மாலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

எனினும் சிறுமி மற்றும் இளைஞர்  வாழும் கிராமங்களில் குழந்தைத் திரு மணத்தை எதிர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது. 

(குழந்தைகள் தொடர்பான புகார் களை பதிவு செய்ய 1098 மற்றும் பெண்கள் உதவி எண் 181 ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.)