சென்னை, செப்.1- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 3இல் கொல்லி என பெயரி டப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறு சேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் பாதையில் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகிறது. இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லி கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இது 903 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து வியாழனன்று (ஆக. 29) ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. இந்த வழி தடத்தில் இதுவரை 6 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில்7 சுரங்கம் தோண்டும் இயந்தி ரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது. இதில், அயனாவரம் மற்றும் ஓட்டே ரிக்கு இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரி வாகும், இதில் முதல் 500 மீட்டர் பாதை கூர்மையான 220 மீட்டர் ஆரம் வளைவுடனும், கடைசி 200 மீட்டர் சுரங்கப் பாதை இயக்கம் 280 மீட்டர் ஆரம் வளைவுகளுடன் பணியை நிறைவு செய்தது. மேலும், இந்த சுரங்கப்பாதை மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து சென்றது சவாலாக இருந்த்து. 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு களை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.