tamilnadu

img

பொன்விழா கண்ட கேரள சுகாதார நலச்சங்கம்

கேரள சுகாதாரத் துறையில் உள்ள அரசு மருத்துவமனை களுக்குச் செல்லும் நோயாளிகளுக்கு தரமான சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 1973 ஆம் ஆண்டு கேரள சுகாதார ஆராய்ச்சி மற்றும் நலச்சங்கம் (கே.எச்.ஆர்.டபிள்யூ.எஸ்) உருவாக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சரை தலைவராகவும், சுகாதாரத் துறைச் செயலரை துணைத் தலைவராகவும், நிதி, சட்டம் மற்றும் திட் டமிடல் துறைகளின் செயலாளர்கள், சுகாதார கல்வித் துறை இயக்குநர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோரை உறுப்பி னர்களாகக் கொண்டு துவக்கப்பட்டது இச்சங்கம். திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் கே.எச்.ஆர்.டபிள்யூ.எஸ் செயல்படுகி ன்றன. மாநிலம் முழுவதும் வெவ் வேறு மருத்துவமனைகளில் 75 கட்டண வார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தாய் சேய் மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் (சிஎச்சி) மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஜனதா, டீலக்ஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் வகைகளில் 1,859 அறைகள் உள்ளன.

கே.எச்.ஆர்.டபிள்யூ.எஸ் இன் கட்டுப்பாட்டில் 14 ஏஆர்சி ஆய்வக ங்கள் செயல்படுகின்றன. இங்கு உலகத் தரத்தில் கண்டறியும் கருவிகள் மூலம்  மிக துல்லியமான முடிவுகள் விரைவாகக் கிடைக்கின்றன. இந்த ஆய்வகங்களில் காருண்யம், ஆர்எஸ்பிஒய் மற்றும் மெடிசெப் உள்ளிட்ட அரசுத் திட்டங்களின் பயனாளிகளான நோயாளிகளுக்கு சிகிச்சை முற்றிலும் இலவசம். நெருக்கடி காலகட்டத்தில், இத்திட்டத்தின் பயனாளிகள் அல்லாதோருக்கும் இலவச பரிசோ தனை செய்து தரப்படுகிறது. சிறப்பு அலகுகளின் நீண்ட வரிசையை சுகாதார நலச்சங்கம் கொண்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.ஐ. அலகு, சி.டி, வீடியோ எண்டோஸ்கோபி, மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் எக்கோ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில், கேத் ஆய்வகம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் பிரிவு, எண்டோஸ்கோபி பிரிவு, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் என்.ஐ.சி. ஆய்வகம் என அனைத்தும் மிக உயர் தரத்தில் உள்ளன. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 2021 பிப்ரவரி 5 அன்று கே ஓசிகோ தொழில்நுட்ப கே கல்லூரியில் எம்ஆர்ஐ அலகு செயல்படத் தொடங்கியது. கார்டியோக் எம்ஆர்ஐ, எம்ஆர்சிபி, எம்ஆர் மேமோக்ராம், வெனோகிராம், எம்.ஆர்.ஆஞ்சியோ கிராம் போன்ற அனைத்து வகையான MRI சேவைகளும் கிடைக்கும். கண்ணூர் இ.கே.நாயனார் நினைவு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், இ.டபிள்யூ.எஸ், டீலக்ஸ் பேவேர்ட் 2024 பிப்ரவரி 7 இல் செயல்படத் தொடங்கியது. இங்கு ஐந்து ஏசி அறைகள் உட்பட 32 அறைகள் உள்ளன. கொல்லம் விக்டோரியா மருத்துவமனையில் ஏ.சி.ஆர். ஆய்வகம் 2019 ஜனவரி 26 அன்று செயல்படத் தொடங்கியது. கோட்ட யம் மருத்துவக் கல்லூரியில் ACR LOB இணைப்பு 29 செப்டம்பர் 2022 அன்று செயல்படத் தொடங் கியது. இங்கு வழக்கமான பயோகெமிஸ்ட்ரி, ஹார்மோன் கண்டறிதல், ஹெமாட்ரோலஜி, கிளினிக்கல் பாத்தாலஜி போன்ற பிரிவுகளிலும் அதிநவீன தானியங்கி பகுப்பாய்விகள் மூலம் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொது மருத்துவமனை, பேரூர்கடை மாவட்ட மருத்துவமனை, தைக்காடு தாய் சேய் மருத்துவமனை, எம்எல்ஏ விடுதி, ஹரிப்பாடு பொது மருத்துவமனை, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, மஞ்சேரி மருத்துவக் கல்லூரி, காஞ்ஞாங்காடு மாவட்ட மருத்து வமனை, கூத்துப்பரம்பு தாலுகா மருத்துவமனை, பையனூர் தாலுகா மருத்துவமனை ஆகிய இடங்களில் சுகாதார சங்கத்தின் ஆய்வகங்கள் உள்ளன. திருவன ந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது கேத் ஆய்வகமும், சி.டி ஸ்கேன் மையத்துக்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில், சுகாதார நலச் சங்கத்தின் தலைமையகத்துடன் இணைக்க ப்பட்ட சிறந்த அச்சகம் செயல்பா ட்டில் உள்ளது. இந்த புதிய நவீன ஆப்செட் இயந்திரம் 2019 டிசம்பர் 30 அன்றும், டிஜிட்டல் அச்சகம் 2023 செப்டம்பரிலும் நிறுவப்பட்டது. சுகாதாரத் துறையிலும் தொடர் புடைய நிறுவனங்களின் அச்சுப் பணிகளை சுகாதார நலச் சங்கம் பொறுப்பேற்று செய்து வருகிறது. சுகாதார நலச் சங்கத்தின் பொறி யியல் பிரிவின் கட்டணப்பிரிவு மற்றும் இதர கட்டிடங்களின் நிர்மாணம் மற்றும் பராமரிப்பு மட்டுமல்லாது சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் சிவில், மின்சார பணிகளுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறது. களமசேரி மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் பொது மருத்துவமனை, அடிமாலி தாலுகா மருத்துவமனை, மானந்தவாடி மாவட்ட மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் கேத் ஆய்வகம், ஸி.ஸி.யூ வார்டுடன்கூடிய டயாலிசிஸ் பிரிவுகளின் கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளன.  பொன்னானி தாய் சேய் மருத்துவ னையில் டோம கேர், யோகா அரங்குகள் போன்றவற்றுக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. கோழிக்கோடு பொது மருத்துவம னையில் கேத் ஆய்வகம் அமைப்பதற் கான பணிகள் நடந்து வருகின்றன.

கேரள மருத்துவ சேவைகள் கழகம், தேசிய சுகாதார இயக்கம், சுகாதாரத்துறை ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை பொறுப்பேற்று சுகாதாரச் சங்கம் செய்து வருகிறது.   கோவிட், நிபா போன்ற பெருந் தொற்றுகளுக்கு எதிரான போராட் டத்தில் சுகாதாரத்துறைக்கு பெரும் பங்களிப்பு செய்த அரசு நிறுவனம் சுகாதாரச் சங்கம். கோவிட் பெருந்தோற்று காலத்தில் சுகாதாரச் சங்கத்தின் பெரும்பாலான கட்டண வார்டுகள், தனிமை வார்டுகள், தடுப்பூசி வார்டுகள் சிகிச்சை மையங்களாக மாறின. அது மட்டுமல்லாது ஏசிஆர் ஆய்வகங்கள் முழுமையாக கோவிட் செயல்பாடுகளுக்கு பயன்படுத் தப்பட்டன. செவிலியர், ஆய்வக நுட்பர்கள் போன்ற 450க்கும் மேற் பட்ட ஊழியர்களையும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு த்தப்பட்டனர். நிபா தடுப்புக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி யின் கட்டண வார்டுகளில் உள்ள 100 அறைகள் 2018 இல் பயன்படுத் தப்பட்டது. 2023 இல் அதே நோய்த்தொற்று ஏற்பட்டபோதும் கட்டண வார்டுகள் தனிமை மையமாக மாற்றப்பட்டது. இவ்வாறு அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் எப்போதும் உதவிகரமாக செயல்பட்டு வரும் சுகாதாரச் சங்கம் தனது பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ளது.   

பொன்விழா ஆண்டில் புதிய உயரங்களுக்கு

1.   நெய்யாற்றின்கரை ஆயுர்வேத மருத்துவமனை, பூஜப்புரா பஞ்சகர்ம ஆயர்வேத மருத்துவமனை, பாலக்காடு ஆயுர்வேத மருத்துவ மனை, கண்ணூர் பரியாரம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆட்டோஇம்முன் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நாம் (NAM) இன் உதவி யுடன் சுகாதார மேம்பாட்டு மைய ங்கள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. SHSRC மற்றும் பிற அரசு முகமைகளுக்கும் ஆராய்ச்சிக்கான ஏசிஆர் ஆய்வுகளின் ஒத்துழைப்பை உறுதிசெய்கிறது.

3. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கான யூரோ டைனமிக் ஆய்வகம், KHRWS இன் ஒத்துழைப்பில் எஸ்ஏடி மருத்துவ மனையில் துவங்குவதற்கான நடவடி க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏ.சி.ஆர். ஆய்வகத்தில் அதற்கு தேவையான தொழில்நுட்பத்துடன் கூடிய மரபியல், உயிரியல், வைராலஜி மற்றும் மைக்கோபயாலஜி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறிதல், வைரஸ்களின் புதிய உருமாற்றம் கண்டறி தல், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்றவற்றின் தாக்குதலை மிக விரைவாக கண்டறியவும் பயன்படும் அரசுக்கு செந்த மான ஆய்வகமாகும் இது.

5. கேரளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இப்போது செயல்படும் ஏஸிஆர் ஆய்வகங்களின் செய்பாட்டுத்திறனை அதிகரிக்கும் நடவடிக்கை களுடன் கொல்லம், கோந்நி, எர்ணாகுளம், திருச்சூர் மருத்துவக் கல்லூரி களில் புதிய ஏஸிஆர் ஆய்வகங்கள் நிறுவும் நடவடி க்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. 6. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் கேத் ஆய்வகமும் சி.டி பிரிவும் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சி.டி பிரிவுக் கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.