பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் ஆட்சேபனைக்குரிய விளம்ப ரங்கள் சட்டம் 1954இன் விதிகளை மீறிய தாக கேரள மாநிலம் பாலக்காட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் போலிச் சாமியாரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான பதஞ்சலி நிறு வனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் அடுத்த விசாரணை யில் பிணையில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் உத்தரவை பாலக்காடு மாவட்ட நீதிபதி பிறப்பித்துள்ளார். கேரளா முழுவதும் வழக்கு அலோபதி உள்ளிட்ட நவீன மருத்து வத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக் களை வெளியிட்டதாகவும் கேரளம் முழு வதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டுள்ளன. கோ ழிக்கோடு நீதிமன்றத்தில் இதுதொடர் பான வழக்கு நிலுவையில் உள்ளன. முன்னதாக போலி விளம்பரம் தொ டர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்புக் கோரினர். பதஞ்சலியின் போலி விளம்பரத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்க ளிலும் மன்னிப்புக் கோரும் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்ட பின்பு 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.