tamilnadu

img

கீழடி: வரலாற்று உண்மை மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது!

கீழடி: வரலாற்று உண்மை மலிவான  அரசியலுக்காகக் காத்திருக்காது!

ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை, ஜூன் 10 - கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப் படாதது குறித்து ஒன்றிய கலாச்சாரத் துறை  அமைச்சர் ஷெகாவத் சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “கீழடியில் அறி வியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்த  பிறகே அங்கீகரிக்க முடியும் என்றும், இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க  முடியும்” என்றார்.

தமிழ்நாடு பதிலடி

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னு டைய எக்ஸ் தளப் பதிவில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். அதில், “முத லில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதி  ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசி யாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண் டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்”  என்று குறிப்பிட்டார். “அவர்களுக்கு ஒவ்வொரு முறையும்  தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக் கிறது” என்று ஒன்றிய அரசின் அணுகு முறையை கடுமையாக விமர்சித்தார். “5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட் பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த  முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்று கேள்வி எழுப்பினார். “தமிழர்களை எப்போதும் இரண்டாந் தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும்  என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடா தீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும்  உங்களது மலிவான அரசியலுக்காக காத்தி ருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களி டம் சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு விடுமா  என்ன?” என்று கூறியிருந்தார்.