tamilnadu

img

எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு: அதிமுகவினர் மறியல்

திருப்போரூர், செப்.28- பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பேருந்து நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், மர்ம நபர்கள் எம்ஜி ஆர் சிலைக்கு காவித் துண்டு அணி வித்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோ கரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராள மான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, காவித் துண்டு அணிவித்தவர்களை உடனடியாக கைது  செய்ய வலியுறுத்தி பேருந்து நிலை யம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரை வில் கைது செய்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய் துள்ள காவல்துறையினர் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்து வருகின்றனர்.