tamilnadu

கோழிப் பண்ணையாளர்களுக்கு கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல

கோழிப் பண்ணையாளர்களுக்கு 
கரூர் ஆட்சியர் அறிவுறுத்தல

கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும்  சிக்பல்லாப்பூர் மாவட்டங்களில் கோழி களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உறுதி  செய்யப்பட்டுள்ளதையடுத்து கரூர் மாவட் டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு  நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப் படி கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.  கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகள் மற்றும் புறக்கடைக் கோழிகளில் நேரில் பார்வையிட்டு மாதிரி கள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதி விரைவு செயலாக்க குழுக்கள் தயார் நிலை யில் உள்ளன.  பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கரூர் மாவட்ட கோழிப்  பண்ணையாளர்கள் பின்வரும் தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். “கர்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவ னம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை வாங்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கர்நாடகாவில் இருந்து  குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்து கள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப் பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் செல்ப வர்களும், வெளியே வருபவர்களும் கிருமி  நாசினியால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறை யாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும். கோழிப் பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். கோழிப் பண்ணையில் அசா தாரண இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடி யாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பண்ணையா ளர்கள் வேறு பண்ணைகள் செல்வதை யும், தங்கள் பண்ணைக்குள் பார்வையா ளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். பிற மாநிலத்திற்கு முட்டைகளை எடுத்துச் செல்வதற்கு கண்டிப்பாக காகித அட்டை பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்படி காகித அட்டைகளை எக்காரணத்தை கொண்டும் திரும்ப எடுத்து  வரக் கூடாது என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.