கமல்ஹாசன் வேண்டுகோள்
சென்னை: இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை களின் கூட்டமைப்பு சார்பாக ‘மீடியா மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு -2025’ சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “இந்திய சினிமாவிற்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக் கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில் நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும். பொழுதுபோக்குகளுக்கான கேளிக்கை வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” வேண்டுகோள் வைத்துள்ளார்.
899 பேர் மீது வழக்கு
சென்னை: ஜோலார்பேட்டை அருகே ரயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ரயில்வே மற்றும் ஆர்.பி.எப் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் பெண்கள் பெட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 899 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
பழனி: பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் பொறியாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. பழனி கோயிலில் உள்ள பொறியாளர் பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.
ஓசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாகும்
ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால், ஓசூர் - பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். ஓசூரில் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ரூ.200 கோடி மானியத்துடன் கூடிய கடனை தொழில் முதலீட்டாளருக்கு வழங்கி அவர் இவ்வாறு சிறப்புரையாற்றினார். மேலும், ஓசூருக்கு இன்னும் பல திட்டங் களை முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றார்.
நெய் தயாரிக்க தொடரும் தடை
மதுரை: திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சர்ச்சைக்கு ஆளான திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், நெய் தவிர்த்து பால் விற்பனை, பதப்படுத்துதல் முதலான பிற விற்பனையைத் தொடரலாம் என்றும், சம்பந்தப்பட்ட நிறு வனம் நெய் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. தமிழகம் வந்தடைந்த வீரர்கள் சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய கிரிக்கெட் அணி சார்பில் 11 பேர் கொண்ட கிரிக்கெட் குழு கலந்து கொண்டனர். இவர்களில் 6 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக, ஊர் திரும்ப முடியாமல் தவித்த நிலை யில் தமிழ்நாடு அரசு அவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து
அதிகரிப்பு ஒகேனக்கல்: கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கன அடியாக அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.