tamilnadu

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபிக்கு  கி.வீரமணி, டிடிவி தினகரன் வாழ்த்து

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபிக்கு  கி.வீரமணி, டிடிவி தினகரன் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவ ருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த் துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலை யில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தோழர் எம்.ஏ. பேபி (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டு பொ றுப்பேற்கிறார். அவருக்கு திராவிடர் கழ கத்தின் சார்பில் வாழ்த்துகள். தோழர் எம்.ஏ. பேபி அவர்கள், கேரள அரசில் கல்வி அமைச்சராக இருந்து அரசி யல் ஆளுமையும் அனுபவமும் உடைய வர். மாணவப் பருவம் முதலே மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணி யாற்றி வருபவர். புதிய பொலிட் பீரோ உறுப்பினர்க ளுக்கும் நமது வாழ்த்துக்கள். 85  உறுப்பினர்களைக் கொண்ட அமை ப்பு – முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்பு – அதில் தமிழ்நாட்டிலிருந்தும் தலைமைக்குழுவுக்கு தோழர்கள் பெ. சண்முகம், கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலபாரதி, என். குணசேகரன் ஆகியோரும் தேர்வு செய் யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவ ருக்கும் திராவிடர் கழகத்தின் வாழ்த்து கள். நாடு முக்கிய இலக்குடன் மதச்சார் பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சுய மரியாதை, சமத்துவத்திற்குப் போராடும் ஒரு முக்கிய கால கட்டத்தில் இத்தேர்வு கள் அதற்குப் பெரிதும் உதவிடும் வகை யில் அமையும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.ஏ. பேபி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். மாணவப் பரு வத்திலிருந்தே சிறந்த பொதுவுடமைவாதி யாக திகழ்ந்து வரும் எம்.ஏ. பேபி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சியோடு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கி றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.