tamilnadu

img

தணிகைதம்பி குடும்பத்திற்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

தணிகைதம்பி குடும்பத்திற்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

புதுச்சேரி,மே 13- மறைந்த மூத்த பத்திரிகையாளர் தணிகை தம்பியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். புதுச்சேரியின் மூத்த பத்திரிகையாளர் தணிகை தம்பி அண்மையில்  காலமானார். புதுச்சேரி ஜவஹர் நகரில் உள்ள அவரது துணைவியார் சிவசங்கரியை கே.பால கிருஷ்ணன் சந்தித்து பேசினார். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத் தில் செய்தியாளர் பணியை துவக்கிய தணிகை தம்பி, பின்னர் புதுச்சேரியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பத்திரிகை  துறையில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததை கே. பாலகிருஷ்ணன் நினைவு படுத்தினார்.   சிதம்பரத்தை பூர்வீகமாக கொண்ட தணிகை தம்பியின் சகோதரர் சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் ஆரம்ப காலத்தில் பணியாற்றியதையும்  நினைவு கூர்ந்தார்.  இச்சந்திப்பின்போது கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.ராஜாங்கம், பிரபுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.