சென்னை, மே 11- பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை யில் வியாழக்கிழமை (மே 11) நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர் புத் துறை சார்பில் நடந்த இந்த விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, பத்தி ரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்குவதன் அடையாளமாக விடுதலை ஏட்டின் தலைமை நிருபர் ஸ்ரீதர், தீக்கதிர் செய்தி ஆசி ரியர் சி.ஸ்ரீராமுலு, தமிழ் இந்து செய்தியாளர் கணேஷ் கிருஷ்ணன், நக்கீரன் செய்தி யாளர் இளையசெல்வன், கலைஞர் செய்திகள் தீபா, சன் டிவி பெரியார் ஈவேரா, டிரினிட்டி மிரர் சேகர் ஆகி யோருக்கு வழங்கினார். இத னைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரி யாக பத்திரிகையாளர் களுக்கு நல வாரிய உறுப்பி னர் அட்டை வழங்கும் பணி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை சார்பில் சென்னை தண்டையார் பேட்டை காமராஜர் நகரில் அரசு அச்சக பணியாளர் களுக்கான ரூ.34 கோடியில் நவீன குடியிருப்புகளுக்கு அடிக்கல்லை நாட்டி, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவிற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை வகித் தார். அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மக்க ளவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, செய்தித்துறை இயக்குநர் மோகன், செய லாளர், நலவாரியக்குழு உறுப்பினர்கள் லட்சுமிசுப்பி ரமணியம், செ.கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.