என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை
என்சிசி (National Cadet Corps) பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு வந்துள்ளது. பட்டப்படிப்பு (குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள்) நிறைவு செய்த, திருமணமாகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 19 முதல் 25 வயதிற்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். என்சிசி பயிற்சியில் “சி” பிரிவு சான்றிதழோடு, அந்தத் தேர்வில் குறைந்த பட்சமாக “பி” கிரேடில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி, உடல் திறன் தேர்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறும். இது குறித்த முழுமையான விபரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பங்களை ஆன்லைனில் நிரப்பலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி : மார்ச் 15, 2025
வங்கிகளில் 1,518 அதிகாரிகளுக்கான பணியிடங்கள்
பொதுத்துறை வங்கி களான
ஐடிபிஐ
(IDBI) பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவற்றில் பல்வேறு அதிகாரிகள் மட்டத்திலான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஐடிபிஐ ஐடிபிஐ வங்கியில் இளநிலை உதவி மேலாளர் பொறுப்பில் 650 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மார்ச் 01, 2025 அன்று 20 முதல் 25 வயது வரை யில் இருக்க வேண்டும். இடஒதுக்கீ ட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி யான வயது வரம்பில் தளர்ச்சியும் உள்ளது. அதே போன்று 60 விழுக்காடு மதிப்பெண்களோடு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டிய லினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 விழுக்காடு பெற்றிருத்தல் அவசியமாகும். ஆன்லைன் வாயிலாக நடை பெறும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் களுக்கு ஐடிபிஐ வங்கி சார்பில் ஓராண்டு பயிற்சி தரப்படும். இந்தப் பயிற்சியின் நிறைவில் PG Diploma in Banking and Finance சான்றிதழ் வழங்கப்படும். அதோடு இளநிலை உதவி மேலாளர் என்ற நிரந்தரப் பணியிலும் அமர்த்தப்படுவார்கள். இதுகுறித்த கூடுதல் விபரங் களை www.idbibank.in என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : மார்ச் 12, 2025.
பேங்க் ஆப் பரோடா
சிறப்பு அதிகாரிகள் பிரிவில் 518 பணியிடங்களை பேங்க் ஆப் பரோடா வங்கி நிரப்பவுள்ளது. முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் அதி காரி பணியிடங்களுக்கான இந்த நிரப்பு தலில் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியாக வயது மற்றும் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணியிடங்களுக்குமே ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். வயது மற்றும் கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : மார்ச் 11, 2025.
பஞ்சாப் நேஷனல் வங்கி
அதிகாரிகள், தகவல் தொடர்பு மேலாளர்கள், முதுநிலை மேலாளர் கள், சைபர் பாதுகாப்பு மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி நிரப்புகிறது. 350 பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு நடக்கவிருக்கிறது. அதன் பின்னர், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு க்கான மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கான தேதிகள் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. விண்ணப்ப தாரர்களின் மின்னஞ்சல்களில் அந்த விபரங்கள் அனுப்பப்படும். ஒவ்வொரு பணியிடங்களுக்கான கல்வி மற்றும் வயதுத் தகுதிகள் அறிவிக்கையின் இணைப்பில் தரப் பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : மார்ச் 24, 2025