tamilnadu

img

ஜன. 11 வரை சட்டமன்றக்கூட்டம்: பேரவைத் தலைவர்

சென்னை,ஜன.6- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்ட த்தொடர் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி  வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கட்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இந்த கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வுக் கூடாது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாளைக்கு  நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த பேரவைத் தலை வர் மு.அப்பாவு, வருகிற 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றார். அதன்படி, ஜன.7 ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறை வுக்கு பேரவையில் இரங்கல் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த 4 நாட்களில் ஜன.8 முதல் 10 வரை மூன்று நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறு கிறது. ஜன. 11 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னம் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து மசோதாக்கல் கொண்டு வரப்படுகிறது. பேரவையில் நடந்தது என்ன?  ஆளுநர் வெளியேறிய விவ காரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப் பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பி னர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்தி ருந்தார்கள். அதிமுகவினர் கையில் பதாகைகளுடன் வந்திருந்தார்கள்.  ஆளுநர் எழும்பும் போது தான் மற்ற கட்சியினர் பதாகைகளைக் காட்டினர். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராக காட்டினார்களா எனத் தெரிய வில்லை. அவர்களுக்கு பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ப தால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு  தெரிவித்தார்கள் என்று தெரிய வில்லை.

ஆளுநர் உரைக்கு குந்தகம் விளை விக்கும் வண்ணம் ஒரு கலவர நோக்க த்துடன் செய்ததால் அதிமுக, காங்கி ரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர் களை வெளியேற்றினோம் என்று விளக்கம் அளித்தார். அரசமைப்பு விதி 176 (1) இன் படி, ஆளுநர் உரை வாசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆளுநர் தனது ஜனநாய கக் கடமையை நிறைவேற்றிய இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்திருக்கி றார். இதற்கு அவையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம் செய்திருக்கி றோம். சட்டப்பேரவை நிகழ்வுகள் மரபு ப்படி நடைபெறுகிறது. இதுவரை எந்த ஆளுநரும் இப்படிச் செய்ததில்லை. 1995-ல் ஆளுநர் சென்னா ரெட்டி ஆளுநர் உரையை வாசிக்காத போது அவரை திரும்ப பெற வேண்டும்  என்று முன்னாள் முதல்வர் ஜெயல லிதா தீர்மானம் நிறைவேற்றினார். புதிய ஆளுநரை நியமிக்கும்போது அரசிடம் பரிந்துரை கேட்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் 1996 பிப்ர வரியில் ஆளுநர் உரை நடந்தது. பேரவைத் தலைவராகிய நான் சென்று ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுத்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக உபசரித்தார்கள். அரசி யலமைப்பு படி ஆளுநருக்கு மரி யாதை அளித்தோம். சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக கலாச்சாரப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவு பெறும் போது தேசிய கீதம் இசைக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடக்கி றது. எனவே, சட்டப்பேரவை நிகழ்வு கள் அவ்வாறே நடைபெறும். தமிழ் நாட்டு மரபுகளை மாற்ற முடியாது. ஆளுநர் வரும்போது இங்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது? இதே ஆளு நர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரிதான் நடைபெறும்’ என்றும் பேரவைத் தலைவர் கூறினார்.