கோவை, ஜன. 4- ஈஷா யோகா மைய நட வடிக்கைகளை ஓய்வுபெற்ற நீதி பதியை கொண்டு முழு விசார ணை நடத்த வேண்டும் என்று இரா. முத்தரசன் வலியுறுத்தியுள் ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கோவையில் ஜீவா இல்லத்தில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ஜக்கி வாசுதேவ் என்கிற சாமியார் நடத்தி வருகிற ஈஷா மையம் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஜக்கி வாசுதேவின் மனைவியின் சாவே மர்மமாக இருந்து கொண்டிருக்கிறது. வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துத் தான் இந்த ஈஷா மையம் செயல்படுகிறது. பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றுகிறார்கள், வனவிலங்குகளை வேட்டையாடுகிறார்கள், சிறுவர் சிறுமியர்களை அடைத்து வைத்து போதை பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் அனுமதி இல்லாமல் இங்கு வந்து செல்கிறார்கள் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இந்த ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்டு வருகின்றன.
தற்போது நடந்துள்ள சுபஸ்ரீ மரணம் சந்தேகத்திற்குரியது, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யோகா மையத்தை நடத்தி வருகிற ஜக்கி வாசுதேவ் செல்வாக்கு மிக்கவர். பிரதமரே அவரிடத்திற்கு வருகிறார். செல்வாக்கு பெற்ற நிறுவனமாக இருக்கிற காரணத்தினால், சுபஸ்ரீயினுடைய மரணம் மறைக்கப்படுகிறது என்று பொதுமக்கள் மத்தியிலே ஒரு ஐயம் நிலவுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் காவல்துறை மிகுந்த மென்மை யான போக்கை கையாளுகிறது. அமைதி காக்கிறது. ஏன் இப்படி அமைதி காக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த பிரச்சனையில் ஜக்கி வாசுதேவை நேரடியாக விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த நீதிபதி ஒரு சமூக அக்கறை உள்ளவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள பிற ஜனநாயக அமைப்பு களும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் தாங்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும். மௌனம் காக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி, மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், கோவை மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜே. ஜேம்ஸ், எம். குணசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.