tamilnadu

img

போதையற்ற தமிழ்நாடு : 1 கோடி கையெழுத்து

சென்னை, பிப்.13- போதையற்ற தமிழ்நாட்டை உரு வாக்கக் கோரி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்க த்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தை  விடுதலைப் போராட்ட வீரரும், முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறது. மாநில அரசு மது பான கடைகளை படிப்படியாக மூட வேண்டிய தேவை உள்ளது. இந்நிலை யில், போதைப் பழக்கத்திலிருந்து இளந் தலைமுறையினரை பாதுகாக்கவும், ஆரோக்கியமான சமூகத்தை கட்ட மைக்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெ ழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை ஞாயிறன்று (பிப்.12) தொடங்கியது.

என்.சங்கரய்யா

சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் ஆகியோரிடம் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். அப்போது, ‘‘திறமைவாய்ந்தவர்கள், சிறப்பாக சிந்திக்கக்கூடியவர்கள் பலரும் போதை யால் அழிந்துவிடுகின்றனர். பிற பிரச்ச னைகளோடு ஒப்பிடும் போது பிரதான பிரச்சனையாக போதை உள்ளது. போதைப் பழக்கம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், நாட்டை அழிக்கும் முக்கிய பிரச்சனை. இதில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், இளை ஞர் அமைப்புகள், மதப்பிரச்சாரம் செய்கிறவர்கள், கோவில், தேவாலயம், மசூதிகளில் உள்ள ஓதுவார்கள், பிரசங்கம் செய்கிறவர்கள் என எல்லோ ரையும் ஒன்றுபடுத்தி இந்த போராட்டத் தை வாலிபர் சங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும். கல்வி வளாகங்களிலும், கிராமப்புற கல்வி நிலையங்களில் தீவிர  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். போதை ஒழிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

ரூ.3லட்சம் கோடி போதைப் பொருள்

இதனையொட்டி சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழு வதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர  தினம் கொண்டாடிய ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அறிவித்தபடி, 75ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது. பெருநகரம் தொடங்கி கிராமப்புறம் வரை குறிப்பாக பள்ளி, கல்லூரி மாண வர்களை குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகிறது. 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் புழங்கும் களமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறு வனங்களின் துணையோடு சட்ட விரோத மான இந்த வியாபாரம் நடைபெறு கிறது. குஜராத்தில் உள்ள அதானிக்கு  சொந்தமான முந்ரா துறைமுகத்தி லிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி லான போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. இதை தடுக்க ஒன்றிய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவை, தமிழ்நாட்டை சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக வாலிபர் சங்கம் ‘போதையற்ற தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி ஒருகோடி கை யெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கி யுள்ளது. போதைக்கெதிராக விழிப்புணர் வை உருவாக்கவும், அரசியல் நட வடிக்கைகளை முன்னெடுக்க வலி யுறுத்தியும் இந்த இயக்கத்தை நடத்து கிறோம்.

மீட்பு மையம் அமைத்திடுக!

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 11 விழுக்காடு அளவிற்கு மது விற்பனை உயர்ந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதி யில் கூறியபடி, மதுவிற்பனை நேரத்தை  தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும். போதைப்பழக்கத்திலிருந்து மாணவர் களை, இளைஞர்களை மீட்டெடுக்கும் வகையில் ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் ஒரு போதை மீட்பு மையத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் முழுவதும் ஒரு கோடி பேரி டம் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளோம். மார்ச் மாதத்தில் சென்னையில் போதைக்கெதிரான மாபெரும் பேரணி நடத்தி முதலமைச்சரி டம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலைஞர்கள் - தலைவர்கள் ஆதரவு

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும்  கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலை ஞர் ரோகிணி, இயக்குநர்கள் சசிக்குமார், வெற்றிமாறன், பிரசாத் முருகேசன், இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா, பத்திரி கையாளர்கள் நக்கீரன் கோபால், விக்ரமன்,  யூடியுபர் மதன்கவுரி, சமூக செயற்பாட்டா ளர் பேரா.சுந்தரவள்ளி உள்ளிட்ட பிர பலங்களும், தொழிற்சங்க, அரசியல் கட்சி களின் தலைவர்களும் இந்த இயக்கத்  திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத் திட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு இளைஞர்களை மழுங்கடிக்கும் சூழ்ச்சி

மத்தியசென்னை மாவட்டம், திரு வல்லிக்கேணியில் கையெழுத்து இயக் கத்தை தொடங்கி வைத்து பேசிய மே 17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, ‘‘1980களுக்கு பிறகு மீண்  டும் சாதிவெறி, மதவெறிக்கு எதிரான அர சியல் உணர்வுபெற்ற இளந்தலைமுறை யை மழுங்கடிக்க, எளிதில் கிடைக்கும் வகையில் போதை பொருள் புழக்கத்தை அதிகரித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்  டத்திற்கு பிறகு தமிழ்நாடு இளைஞர்களை மழுங்கடிக்க ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழங்குகிறது. போதைப் பொருள் குறித்து தகவல் தருகிறவர்கள் அடித்துக் கொல் லப்பட்டுள்ளார். மாநில அரசு இதில் கொள்கை முடிவெடுக்க வேண்டும். தமிழ்  நாட்டில் போதைப் பொருள் அதிகமானால் பொருளாதாரம் வீழும்’’ என்றார். இந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர் டி.சித்தார்த்தன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ. பார்த்திபன், 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பேசினர்.

வடசென்னை

வடசென்னை மாவட்டம் அம்பத்தூ ரில் நடைபெற்ற கையெழுத்து இயக்க  துவக்க நிகழ்வை, மாவட்டத் தலைவர்  நித்யராஜ் தலைமையில் நடைபெற்ற கை யெழுத்து இயக்கத்தை வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், ராயப்  பேட்டை அரசு மருத்துவமனை மருத்து வர் அருணாராஜ், எழுத்தாளர் கரண் கார்க்கி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், பாலமுருகன் (இந்திய  ஹோமியோபதி குழுமம்), சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.அபி ராமி, ஆர்.தமிழ்ச்செல்வி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமி ழன், பொருளாளர் ஆர்.விஜய், இப்ராகிம் (விசிக) உள்ளிட்டு பொதுமக்களும் கலந்து  கொண்டு கையெழுத்திட்டனர். இதில் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகி களும், அம்பேத்கர் மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தொமுச பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோ ரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.