tamilnadu

img

காப்பீட்டு ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு - கொல்கத்தாவில் எழுச்சியுடன் தொடங்கியது

கொல்கத்தா, ஜன. 9- காப்பீட்டு ஊழியர்களின் தேசிய அமைப்பான அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) 26  ஆவது அகில இந்திய மாநாடு கொல்கத்தா ஜோதிபாசு மையத்தில்  ஜனவரி 8 ஞாயிறன்று எழுச்சியுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்துடன் மாநாடு தொடங்கியது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.ரமேஷ் கொடியேற்றினார். தியாகிகள் மண்டபத்தில் நடந்த தியாகிகளுக்கான மலரஞ்சலியைத் தொடர்ந்து நூற்றியொரு வயதை தொட்ட  அமைப் பின் நிறுவன தலைவர் சந்திர சேகர் போஸ் தலைமை வகித்தார். பொதுமாநாட்டை கேரள முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புதிய  பொருளாதாரக் கொள்கையால் மனிதர்களின் அடிப்படை வாழ்வா தார பிரச்சனைகளுக்கு தீர்வு காண  முடியாது என்பதை கோவிட் பெருந்தொற்று காலம் அம்பலப் படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான மாற்று சாத்தியம் என்பது உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறி வருகிறது. பொதுத்துறையை வலுப்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி யும், மேம்பாடும் சாத்தியமாகும். நாட்டின் பொருளாதார தன்னம்பிக்கைக்கு பொதுத்துறையில் எல்ஐசியை பாதுகாப்பது அவசியம் என்றார். பொதுமாநாட்டுக்கு வி.ரமேஷ் தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா உள்ளிட்டோர் பேசினர். நான்கு நாள் மாநாட்டில் சுமார் ஆயிரத்து ஐநூறு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஜனவரி 11ஆம் தேதி மாநாடு நிறைவடையும்.