அருங்காட்சியக மேலாளரிடம் சிபிஎம் மனு அளித்து வலியுறுத்தல்
மதுரை, பிப். 11- மதுரை காந்தி அருங்காட்சி யகத்தில் ஈஷா அமைப்பின் மத நிகழ்ச்சிக்கு வழங்கிய அனுமதி யை ரத்து செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் களமாக காந்தி அருங்காட்சியகம் மாறக் கூடாது என்று அருங்காட்சியக மேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசத் தந்தை மகாத்மா காந்தி யின் வரலாற்றுச் சுவடுகளை அனைத்து மக்களுக்கும், குறிப் பாக இளைஞர்கள், மாணவர் களுக்கு கொண்டு சேர்க்கும் அரும் பணியை மதுரை காந்தி அருங்காட்சியகம் செய்து வருகி றது. அப்படிப்பட்ட செயல்களில் ஈடு பட்டு வரும் காந்தி அருங்காட்சியக நிர்வாகத்தின் தற்போதைய செயல்பாடுகள் மதுரை மக்கள் மற்றும் மகாத்மா காந்தி மீது பற்று கொண்டவர்களுக்கு மிகுந்த மன வேதனையையும் , ஆழ்ந்த கவலையையும் அடையச் செய் துள்ளது . குறிப்பாக , மத நல்லி ணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்து பவர்களின் களமாக காந்தி அருங் காட்சியகம் மாறக்கூடாது . மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் அரசியல் குருவாக விளங்கிய சாவர்க்கர் என்பவரின் புகழ்பாடும் புத்தகத்தை காந்தி அருங்காட்சி யக வளாகத்தில் விற்பனை செய்த நிகழ்வு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. மனவேதனை தருவ தாகவும் அமைந்தது . தற்போது பிப்ரவரி 18 ஆம் தேதி காந்தி அருங்காட்சியகத்தில் சிவராத்திரி யை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈசா மையம் சார்பில் - ஈசனுடன் ஓர் இரவு எனும் பெய ரில் மத நிகழ்வு கொண்டாட்டங்கள் நடக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றது .
மதம் சார்ந்த நிகழ்விற்கு அனுமதி அளித்ததன் மூலம் காந்தி அருங்காட்சியக நிர்வாகத்திற்கு அவப்பெயரையும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் மதச்சார்பின்மை என்கின்ற உயர்ந்த கொள்கைக்கும் களங் கத்தையே உருவாக்கும் என ஆழ்ந்த கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் . மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் - மத நம்பிக்கை உள்ள வர்களின் உணர்வுகளை மதிப்ப தையும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்பட வேண்டு மென்பதிலும் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் மதநம்பிக்கை என்ற பெயரில் மக்களை தவ றாக வழிநடத்துவோரையும் , மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை மட்டு மல்ல அதற்கு தூபம் போடு பவர்களையும் , அத்தகைய நட வடிக்கைகளுக்கு துணைபோகிற வர்களையும் கண்டிக்கவோ, அதற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தவோ தயங் காது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் . எனவே , ஜக்கி வாசுதேவின் ஈசா மையம் சார்பில் நடை பெறும் ஈசனுடன் ஓர் இரவு எனும் நிகழ்விற்கு வழங்கிய அனுமதி யை ரத்து செய்வதோடு, எதிர் காலத்தில் இதுபோன்ற எந்த மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு போதும் அனுமதி வழங்குவ தில்லை என்கின்ற உறுதியான நிலைபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.