tamilnadu

img

கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது!

கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை  ஒருபோதும் ஏற்க முடியாது!

மாநில அரசின் கல்வி உரிமையை ஒன்றிய பாஜக அரசு நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ.) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4-ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் என மொத்தம் 2401 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ.) வழங்கப்படும் நிதியுதவி பயன்பட்டு வருகிறது.

 ஒன்றிய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.  ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக, தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.