tamilnadu

img

பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்!

பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல!

புதுதில்லி, மே 17 - “நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது”, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கூறி யுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்  பட்டிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடை பெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து, விவாதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துவதற்கு, பிரதமரும் அவரது அர சாங்கமும் மறுத்திருப்பது துர திர்ஷ்டவசமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.  நாடாளுமன்ற அமர்வினை உட னடியாக நடத்தி, நாட்டு மக்களுக்குத்  தெரியப்படுத்தவும், ஏதேனும் விளக் கங்கள் இருப்பின் அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு களை வழங்கவும் அரசாங்கத்தை நாங்  கள் வலியுறுத்துகிறோம். மாறாக, பாஜக - தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மட்டும் கூட்டி, ‘ஆபரேசன் சிந்தூர்’  குறித்து பிரதமர் விளக்கி இருக்கி றார். இது பாரபட்சமானது. குறிப்பாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு  பிரச்சனையில், இதுபோன்ற விளக் கத்திற்காக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வர்கள் உட்பட நாட்டின் அனைத்து முதலமைச்சர்களின் கூட்டத்தையும் அரசாங்கம் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அரசாங்கம் முதலில் இந்திய மக்க ளுக்குப் பதில்கூறக் கடமைப்பட்டி ருக்கிறது. மேலும் அதன் நடவடிக்கை களில் வெளிப்படைத்தன்மை இருந் திட வேண்டும்.  ஆளும் கட்சித் தலைவர்களும் மாநில அமைச்சர்களும் கூட மத வெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மேற்கொண்டிடும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இவை ஒருபுறமிருக்க, அரசாங் கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவைத் தலைவரை  அழைத்து, பல்வேறு நாடு களுக்கு தூதரக ரீதியான நடவடிக்கை களின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்க முடிவு செய்துள்ள பல்வேறு பிரதிநிதி கள் குழுக்கள் குறித்து அவருக்குத் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, பஹல்காம் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் நடவ டிக்கைகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு தயக்கங்கள் இருந்த போதிலும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்; முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட  கோரிக்கைகளை மீண்டும்  வலியுறுத்தினாலும், பரந்த தேசிய நல னுக்காக, அத்தகைய ஒரு பிரதிநிதி கள் குழுவில் ஒரு பகுதியாக இருக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட மைப்பட்டது என்பதையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அரசியல் தலைமைக்  குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)