tamilnadu

img

வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையமா?

காஞ்சிபுரம், மார்ச் 15- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் விளை கையகப்படுத்து வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயி களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று (மார்ச் 15) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமை வகித்தார். மாநிலத்  தலைவர் பெ. சண்முகம் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் சரவணன், போராட்டக்குழு நிர்வாகி சுப்பிரமணியன் மற்றும் பலர் உரையாற்றினர். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள  4,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி புதிய  விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நில கையகப்படுத்தும் பணியில் மாநிலஅரசு ஈடுபட்டுள்ளது. 1000த்திற்கும் மேற்பட்ட வீடுகளை, ஏரி, குளம், பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், ஏராளமான விளை  நிலங்களை அழித்து விமான நிலை யம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மிகப்பெரிய திட்டத்தை செயல் படுத்துவதற்கு சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட பணிகள் இதுவரை அரசு செய்யவில்லை.

அரசு அதிகாரப்பூர்வமாக எந்த விதமான அரசாணையும் இதுவரை வெளியிடாத நிலையில் 13 கிராமங் களிலும் காவல்துறை தடுப்புகள் தற்காலிக காவல் நிலையங்கள் அமைத்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் நிலை தொடர்கிறது. எனவே, காவல் தடுப்பு, தற்காலிக காவல் நிலையங்கள் உடனடி யாக அப்புறப்படுத்துவதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கிராமங்களில் பட்டியல் இன  மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் பல வருடமாக வசித்து வரும் குடி யிருப்புகளையும் இழக்கும் நிலை உள்ளது. மேய்ச்சல் நிலம், அரசு புறம்  போக்கு நிலங்கள், காப்பு காடுகள் அழியும் நிலை உள்ளது. 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாக மும் செயல்பட வேண்டும். திட்டம் நிறை வேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறு கள் உள்ளதா? என்பதற்கான அறிக்கை  வெளியிடப்படவில்லை என்றும் தலைவர்கள் குற்றம் சாட்டினர். திட்டம் செயல்படுத்துவதால் சமூ கத்தில் ஏற்படும் தாக்கம் சம்மந்தமான அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீடு அறிக்கையும் பல்வேறு ஆய்வறிக் கைகளை தயாரித்து அரசு பொது மக்கள் விவாதத்திற்கு உட்படுத்துவது போன்ற ஆரம்ப கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

அதிகாரிகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவதால் மக்கள் மத்தியில் பதற்றமும், அச்சமும் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது தமிழ்நாடு அரசு அடுக்குமுறையை மாற்றிக்கொள்ள வேண்டுமாறும், அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் அனைத்தையும் மூடி மறைத்து செயல்படுவதை நிறுத்த வேண்டும்.  திமுக தேர்தல் வாக்குறுதி யில் அரசு திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் போது விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் எடுக்கமாட்டோம் என்று கூறியிருப்பதை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்துவரும் நிலையில், இந்த விமான நிலையமும் தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கு நாம் ஏன் இடத்தை இழக்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. நிலத்தை வழங்க  விரும்பும் மக்களிடமும் கூடுதலான இழப்பீடு வழங்குவோம் என்று பொது வாக சொல்லப்பட்டு வருகிறதே தவிர  அதிகாரப் பூர்வமாக சந்தை மதிப்பி லிருந்து எத்தனை மடங்கு கூடுத லாக வழங்கப்படும் என்ற அரசு உத்த ரவு எதுவும் இதுவரை வெளியிடப் படாததால் வாக்குறுதி காப்பாற்றப் படுமா என  விவசாயிகளிடம் சந்தேகம்  நிலவுகிறது என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறினர். விளைநிலம், குடியிருப்புகள், ஏரி கள், குளம், குட்டை, பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், மக்கள்  வாழ்வாதாரம் சில கிராமம் முழுமை யாக அழித்து பரந்தூரில் பசுமை  விமான நிலையம் அமைவதை தமிழ் நாடுஅரசு மறுபரிசீலனை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.