விண்ணில் உள்ளது
சொர்க்கம் என்று
உரைப்பவன் எவன்?
மண்ணில் சுகம்நாம்
அடைய விடாமல்
தடுப்பவன் அவன்!
’இந்து’ என்று
சொந்தம் போல
அழைப்பவன் எவன்? – அற்ப
ஜந்துவாய்க் கூட
தலித்தை எண்ணாமல்
வெறுப்பவன் அவன்!
ஒரே நாடு
ஒரே தேர்தல்
என்பவன் எவன்?
ஒரே சாதி
ஒரே சுடுகாட்டை
எதிர்ப்பவன் அவன்!
இலவசத் தால்தான்
நாடு கெட்டது
என்பவன் எவன்?
அதானி களுக்கு
நாட்டையே தானமாய்த்
தந்தவன் அவன்!
சனா தனமே
சாசுவத மானது
என்பவன் எவன்?
பால்ய விவாகமும்
ஸதியும் தேவை
என்பவன் அவன்!