tamilnadu

img

திருவட்டாரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அயனி மரம் கடத்தல்

பாஜக தலைவருக்கு அரசு அதிகாரிகள் உடந்தையா?

போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் -சிபிஎம் முடிவு

திருவட்டார், டிச. 8- குமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சி யில் அரசு நிலத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அயனி மரம் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அதிகாரிகள் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  திருவட்டாறு வட்டம் வீயன்னூர் ஆ வருவாய் கிராமத்திற்குட்பட்டது செறு கோல் ஊராட்சி. இங்கு புல எண் 74 இல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்குள்ள நெல்லிக்குளம் அருகில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான அயனி மரம் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்தது.கடந்த 04.12.2023 அன்று வேரோடு சாய்ந்தது. பல லட்சம் ரூபாய் விலை மதிப்பு மிக்க இந்த அயனி மரத்தை  ஊராட்சிமன்ற தலைவர் அனுசன் அய்யப்பன், வார்டு உறுப்பினர் வசந்தா ஆகியோர் பட்டப்பகலில் பொக்லைன் இயந்திரம் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து அறுத்துச் சென்று விற்பனை செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறைக்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குழித்துறை பொதுப்பணித்துறைக்கும்  (நீர் ஆதாரம்) புகார் மற்றும் தகவல்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரி களின் துணையுடன்தான் மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டாறு வட்டாரக்குழு சார்பில்  திருவட்டாறு வட்டாட்சியர் மற்றும்  வீயன்னூர் ஆ கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப் பட்டது.  திருவட்டாறு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளிக்க  சென்ற போது அவரது புகாரை திரு வட்டாறு காவல்நிலையத்தில் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் மரத்தை வெட்டிய நபரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு தந்தால் தான் புகார் மனு பெறமுடியும் என்று திருவட்டாறு காவல் நிலையத்தில் தெரிவித்ததாக கூறியது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.  அரசு கருவூலத்திற்கு வந்து சேர வேண்டிய பல லட்சம் ரூபாயை மீட்டெ டுக்க வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை ஏன் தயக்கம் காட்டு கிறது என்று விவசாயிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான  அயனி  மரத்தை கடத்திய கும்பல் மற்றும் அவர் களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என வும் அவர்கள் தெரிவித்தனர்.  (ந.நி.)