கோயம்புத்தூர், அக்.3– ஊழியர்களின் விருப்ப பணி மாறுதலுக்கு லஞ்சம், எப்.எல் 2 என்ற கடையில் வெளி நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற முறைகேடுகள் தொடர்கிறது; இது குறித்து விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என கோவையில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் 5ஆவது மாநாடு கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் நடை பெற்றது. இம்மாநாட்டில் தொழிலா ளர் சட்டங்களை சுருக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், டாஸ்மாக் ஊழி யர்களை பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். டாஸ்மாக் நிர்வாகத்தின் சீர் கேடுகள், அதிகாரிகளின் துஷ்பிரயோ கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து வஞ்சிக்கப்படு வது குறித்தும் அவர்கள் பிரச்சனை களையும் இம்மாநாடு விவாதித்துள்ளது. டாஸ்மாக் சூப்பர் வைசருக்கு ரூ.13 ஆயிரத்து 500 தான் ஊதியம் வழங் கப்படுகிறது. ரூ.11 ஆயிரத்து 500 விற்ப னையாளருக்கும், அதற்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 500 மட்டுமே ஊதியம் வழங்கப்படு கிறது. ரூ.26 ஆயிரம் என்ற குறைந்த பட்ச ஊதியத்தையும், அரசு ஊழியர் களுக்கு நிகரான ஊதியத்தையும் வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வா கத்தில் தொழிலாளர் சட்டங்கள் அம லாவது இல்லை. நீதிமன்றத்தீர்ப்பை அமல்படுத்தாமல் ஏமாற்றுகிறார்கள். வேலை நேரம், விடுப்பு, வார விடுமுறை மற்றும் சலுகை என எந்த வித சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. பணிபுரியும் இடங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லை. தொழிலாளர்கள் தேவையற்ற இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தேவையான விருப்ப இடமாற்றம் கேட் டால் அதற்கு பணம் கேட்கிறார்கள். பல துறைகளிலிருந்து வந்து டாஸ் மாக் பணியாளர்களை மிரட்டுகிறார் கள். இந்த முறைகேடுகள் குறித்து விசா ரிக்க கமிஷன் அமைக்க வேண்டும். எப்.எல் 2 என்ற கடையில் வெளி நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்கிறார் கள். இதன் மூலம் டாஸ்மாக் நிறு வனத்தை தனியார்மயமாக்க முயல் கிறார்கள். டாஸ்மாக் கடை படிப்படி யாக மூடப்படும் என்று அறிவித்துவிட்டு, புதிய எப்.எல் 2 கடைகள் திறக்கப்படு கின்றன. தொழிலாளர்கள் உயிரி ழந்தால் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வலுவான பிரச்சார இயக்கத்தை தொடங்க உள்ளோம்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் தொழிலாளர்களுக் கான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர் பெயரைச் சொல்லி ஏரா ளமான மிரட்டல்கள் மற்றும் இடமாற்றம் போன்ற தொந்தரவுகள் வருகிறது. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமி ராக்கள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் இது வரை காவல் நிலையங்களில் கூட வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன், சிஐடியு மாநில துணை தலை வர் இ.பொன்முடி, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜான் அந்தோணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.