தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச அலைசறுக்கு லீக் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்றுள்ள ஜப்பான் வீராங்கனை ஷினோ மட்சுடா வியாழனன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இந்த போட்டி வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது.