tamilnadu

img

கணிதவியலின் தொழில்நுட்பத் துறை பயன்பாடு சர்வதேச மாநாடு

கணிதவியலின் தொழில்நுட்பத் துறை பயன்பாடு சர்வதேச மாநாடு 

கணிதவியல் மற்றும் கணிதவியலின் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு, கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை, சிங்கப்பூர் தேசிய பல்கலை பேராசிரியர் சூரிய பிரியா ஆசைத்தம்பி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பெங்களூரு இந்திய அறிவியல் கழக பேராசிரியர் திருப்பதிகுடி, மாநாட்டு மலரை வெளியிட்டார். இம்மாநாட்டில் மலேசியா செயின்ஸ் பல்கலை. பேராசிரியர் கோபிதாசன் ருத்ருசாமி, சிங்கப்பூர் தேசிய பல்கலை பேராசிரியர் சூரியபிரியா ஆசைத்தம்பி, சீனா செங்குடு பல்கலை பேராசிரியர் லியு சாங், கனடா வேனியர் கல்லூரி பேராசிரியர் சக்கரவர்த்தி ராமநாதன், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பேராசிரியர் சுமித்ரா உள்ளிட்ட  பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சி படைப்புகளை விவரித்தனர். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் கணிதவியல் பின்னணி குறித்து பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக மையப்புல தலைவர் ராமசாமி தலைமை ஏற்று விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், கணிதவியல் பேராசிரியர் நரசிம்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். இணை ஒருங்கிணைப்பாளர் மேகநாதன் நன்றியுரையாற்றினார்.