tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி புறநகரில் 200 இடங்களில் சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.13 - திருச்சி புறநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இடைக் கமிட்டி மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் கோரிக் கைகளுக்கான தீர்மானங்களுக்கு செயல் வடிவம்  கொடுக்கும் வகையில் திருச்சி புறநகர் மாவட்டம் முழு வதும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (நவ.11, 12) 200 இடங்களில் எழுச்சியுடன் போராட்டங்கள் நடைபெற்றன. குடிமனை பட்டா, நூறு நாள் வேலைக்கூலி, குடிநீர்,  சுகாதாரம், மயான பாதை, சாலை போன்ற அடிப்படை தேவைகூட பூர்த்தியாகாமல் பல நூறு கிராமங்கள் உள்ள  நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ள அனைத்து  கிராமங்களிலும் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி மன்றங்கள்  ஆகியவற்றில் மனு கொடுப்பது, ஆர்ப்பாட்டம் நடத்துவது  போன்ற வடிவங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பொதுமக்களை இணைத்து போராட்டம் நடத்தினர்.  இந்தப் போராட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் தலை மையில், இடைக்கமிட்டி செயலாளர்கள் திருவெறும்பூர் வட்டக்குழு குருநாதன், திருவெறும்பூர் வடக்கு ரவிக்குமார்,  தா.பேட்டை பாண்டியன், உப்பிலியபுரம் முத்துக்குமார், லால்குடி மார்ட்டின், புள்ளம்பாடி அருமைதாஸ், முசிறி அசோக், தொட்டியம் முருகேசன், மணப்பாறை கோபால கிருஷ்ணன், வையம்பட்டி வெள்ளைச்சாமி, மருங்காபுரி நாகராஜ், மண்ணச்சநல்லூர் மேற்கு சுப்பிரமணி, துறையூர்  சங்கிலி துரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.