tamilnadu

அருணாச்சல்: பனிச்சரிவில் சிக்கிய ஏழு வீரர்களை தேடும் பணி தீவிரம்

இடாநகர்,பிப்.7- இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன் றான அருணாச்சலப் பிர தேசத்தில் கடந்த சில நாட் களாக மோசமான வானிலை நிலவுகிறது. கடும் பனிப் பொழிவு  காரணமாக அங்கு அடிக்கடி பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  அங் குள்ள காமெங்  செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்களின் வாகனம் பனிச்சரிவில் சிக்கிய தாக தகவல் வெளியாகி யுள்ளது. ஏழு வீரர்கள் வரை சிக்கி யிருப்பதாகவும் வீரர்களை மீட்க ஹெலிகாப்டரில் மீட்புக் குழு சென்றுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரி வித்துள்ளது.  அருணாசல பிரதேசத் தில் உள்ள காமெங் செக்டார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் பூட்டான் மற்றும் சீனாவின் எல்லையாக உள்ளது.