மதுரை, அக்.15 - வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டுமென மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்.12 அன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி, அக்.13 அன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மதுரையில் 16 செ.மீ. மழைப் பொழிவு பதிவாகியது. இந்த 16 செ.மீ. மழையில், குறிப்பாக அக்.12 அன்று இரவு 10 மணி முதல் அக்.13 அன்று அதிகாலை 3.30 மணி வரை (5.30 மணி நேரம்) மட்டும் 13 செ.மீ மழை பதிவாகியது. புவி வெப்பமயமாத லால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, குறுகிய காலத்தில் அதிகப்படியாக பெருமழை பொழியும் என அறிவிய லாளர்கள் கூறி வருவதற்கான எடுத்துக்காட்டாகும் இந்த நிகழ்வு. இந்திய வானிலை ஆய்வுத் துறை தரவுகளின்படி, வடகிழக்குப் பருவ மழை காலமான அக்.1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மதுரையில் மட்டும் பதிவான சராசரி மழையின் அளவு 163.4 மி.மீ.. ஆனால், இதே காலத்தில் வழக்கமாகப் பதிவாகும் மழையின் அளவு 70.8 மி.மீ. மட்டுமே. எனவே, அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்க ளில் மட்டும் மழைப் பொழிவு இயல்பை விட 131 சதவீதம் அதிகமாகப் பதி வாகியுள்ளது. வடகிழக்குப் பருவ மழை காலத்தில் இயல் பைவிட அதிகமான மழைப்பொழிவு பதி வாகும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டும்.
மதுரையில் உள்ள குளங்கள், கால்வாய்களுக்கு நீர்வரத்து பெருகி உள்ளது. மழைநீர் செல்லும் கால்வாய் களில், எங்கெல்லாம் நீரோட்டம் தேங்கியுள்ளது என்பதைக் கண்ட றிந்து அவற்றை அப்புறப்படுத்து வதற்கான ஒரு நல்வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இரவு-பகல் பாராமல் குப்பைகள், அடைப்புகள் தேங்கி யுள்ள பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்திட வேண்டும். குறிப்பாக மதுரை மாநகர் பகுதிக்கு வருகின்ற 11 கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏற்பட் டுள்ள மேடுகள் மற்றும் கால்வாய் பகுதியில் வளர்ந்துள்ள களைச்செடி கள், கால்வாய் ஓரத்தில் இருந்து கால்வாய் பகுதியில் விழும் மரக்கிளை கள் போன்றவற்றால் நீரோட்டம் தடை படும் இடங்கள் அதிகம் உள்ளன. மேலும் கால்வாய் பகுதியில் உள்ள பாலங்களின் தூண்கள் அடிப்பகுதி யில் பல இடங்களில் குப்பைகள், மரக்கிளைகள் அடைத்து மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
குறிப்பாக பந்தல்குடி, சிந்தா மணி, அவனியாபுரம், கிருது மால்நதி, கொண்டைமாரி ஓடை போன்ற வாய்க்கால்களின் நீரோட் டத்தை சீர்செய்ய கூடுதல் முக்கி யத்துவத்தோடு பணிகளை துவக்கிட வேண்டும். திருப்பாலை சர்வேயர் காலனி வழியாக வரும் சாத்தையாறு ஓடை வெள்ளநீர் கடந்த காலங்களில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிய நிலையில், சாத்தை யாறு ஓடையைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக கவனிக்க வேண்டும். பெருமழையின் காரண மாக பெரியாறு பாசனப் பகுதியின் வடிநீர், மதுரை மாநகர வடக்குப் பகுதி வழியாக வைகை நதியில் சேர, அனைத்து கால்வாய்களிலும் உள்ள இடர்களை அகற்றி வழி ஏற்படுத்த வேண்டும். வண்டியூர், மாடக்குளம் கண்மாய்களை கண்காணிக் கும் பணிகளில் வருவாய் மற்றும் பேரிடர் துறை, நீர்வ ளத்துறை, மாநகராட்சி மூன்றும் இணைந்து தொடர்ந்து ஈடுபட வேண்டும். குறிப்பாகப் போக்குவரத்து காவல் துறை யின் பணிகளை முக்கிய சந்திப் புகளில் முழுமையாக உறுதிப் படுத்த வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழை, தற்போது நின்றுள்ள நிலையில் இவற்றை சரிசெய்ய ஒரு நல்வாய்ப்பினை வானிலை ஏற்படுத்திக் கொடுத் துள்ளது. அடுத்து நாம் எதிர்கொள்ள வுள்ள பெருமழையை பாதிப்பின்றி சமாளிக்க, இப்பணிகளை மேற்கொள் வது மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். வடகிழக்குப் பருவமழையை யொட்டி, பேரிடர்களைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு சென்னையின் 15 மண்டலங்களுக்கும் 15 ஆட்சிப்பணி அதிகாரிகளை நியமித்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியதை வரவேற்கிறேன். மதுரை மாநகராட்சிப் பகுதியில் அம்ருத் - குடிநீர் பணி, வடிகால், பாதாளச் சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள், இரண்டு முக்கிய மேம்பால பணிகள் நடந்து வருவ தால் மதுரை மக்கள் கடும் இடர்பாடு களைச் சந்தித்து வருகிறார்கள். அரசு நிர்வாகம் கூடுதலாகவும், கவன மாகவும், பணியாற்ற வேண்டிய இந்த காலத்தில், மாநகராட்சியின் முக்கியமான பணியிடமான இரண்டு துணை ஆணையர் பதவி நிரப்பப்படா மல் இருக்கிறது. இவைகளை உடனே நிரப்ப வேண்டும். பருவமழை கால இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமை யாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்து முயற்சிகளையும் உறுதிப் படுத்த, தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.