புதிய சிறைச்சாலை அமையவுள்ள இடத்தில் ஆய்வு
கோவை, ஜூன் 4- கோவை மத்திய சிறைச் சாலை, காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்றப்பட வுள்ள நிலையில், அப்பகுதி யில் காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர் வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் ஆய்வு செய் தார். கடந்த 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையை, வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அங்கு சர்வதேச அளவிலான செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் கடந்த 2010 ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி தற் போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற் போதைய சிறைச்சாலை மைதானத்தில் செம் மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கான பணிகள் துவங்கின. இந்நிலை யில், கோவை மத்திய சிறைச்சாலை இட மாற்றம் செய்யப்படவுள்ள, காரமடை அடுத் துள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் புதனன்று மத்திய சிறைச்சாலை கட்டு மான ஆயத்தப் பணிகள், காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின் சைலேஷ் குமார் யாதவ் செய் தியாளர்களிடம் கூறுகையில், பிளிச்சி பகுதி யில் சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் ரூ.312.33 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆண் கைதிகளுக்கான சிறைச்சாலை, பெண் கைதிகளுக்கான சிறைச்சாலை, சிறைக்காவலர் குடியிருப்புகள் என மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெறும். இப் பணிகள் அடுத்த 18 மாதங்களில் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது, என்றார்.