tamilnadu

img

500 டாஸ்மாக் கடைகள் மூடலுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

சென்னை, ஜூன் 22-  500 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் நடவடிக்கையை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை  மூடுவது குறித்த தமிழக அரசின் நடவடிக்கை யை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  வரவேற்கிறது. கல்வி நிலையங்கள், வழி பாட்டுத் தலங்களுக்கு அருகில், மக்கள் நட மாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ள,  பிரச்சனைக்குரிய கடைகள் என்கிற முறை யில், எங்கள் கவனத்துக்கு வந்த 37 கடை களின் பட்டியலை அமைச்சரை நேரில் சந்தித்து  அளித்தோம். அவற்றில் சொற்பமானவைதான் மூடப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மிச்சம் உள்ளதையும், இன்னும் பொது மக்கள் மத்தியிலிருந்து வரப்பெற்ற ஆலோ சனைகளையும் இணைத்து கூடுதல் கடை களை மூட வேண்டும் என வலியுறுத்துகிறோம். 20.06.2023 தேதியிட்ட டாஸ்மாக் நிர்வாகத்  தின் அறிவிக்கை, எந்தெந்த வகைப்பட்ட கடை கள் மூடப்பட வேண்டும் என அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதலா வதாக இடம் பெற்றிருப்பது வருமானம் குறை வாக கிடைக்கும் கடைகள் என்பதாகும். டாஸ்மாக் நிர்வாகம் லாப நஷ்ட கணக்கில் மட்டுமே பார்த்து மூடப்படும் கடைகள் பட்டி யலை இறுதி செய்ததோ என சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் மிக மோசமாக ஒரு  தலைமுறையையே சீரழித்துக் கொண்டி ருக்கும் போதை கலாச்சாரத்தை தடுத்து  நிறுத்துவதற்கு அரசு கூடுதல் முக்கியத்து வத்தை அளித்திட வேண்டும். வருமானம் வராத கடைகளை மூடுவது என்ற நிலைப் பாட்டை தாண்டி, மக்களை பாதிக்கிற கடை களை அப்புறப்படுத்த உறுதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  மதுபான விற்பனையை வருமானம் தரும்  நடவடிக்கையாக மட்டுமே பார்த்தால் போதைப் பழக்கத்தை தடுத்து நிறுத்த முடி யாது என மீண்டும் டாஸ்மாக் நிர்வாகத்தை யும் தமிழக அரசையும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.