சென்னை, ஜன.23- சென்னையில் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத் ்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலை வர் ஏ.டி.கண்ணன், மாநில செயலாளர் வீ. மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை சேர்ந்த சட்டக் ்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல் துறையினர் முகக் கவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்ததுடன், அவர் எடுத்து வந்த சைக்கிளையும் பறிமுதல் செய்து ள்ளனர். “நான் பார்மசியில் வேலை செய்கிறேன் விட்டுவிடுங்கள்’’ என கூற “சட்டம் பேசுகிறாயா’’ எனசொல்லி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர்கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள் ்ளனர். இந்த விவகாரம் தெரியக்கூடாது என்ப தற்காக காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் உடனே போராட்டம் நடத்தியதோடு எஸ்எப்ஐ மற்றும் பிற அமைப்புகள் மாணவரின் உறவி னர்கள், நண்பர்கள் புகார் அளித்ததை தொட ர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், கொடுங்கை யூர் தலைமைக்காவலர் பூமிநாதன், முதல் ்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்ப வத்திற்கு காரணமாக இருந்த ஆய்வாளர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி சென்னை ஓட்டேரி யில், உள்ள புலியந்தோப்பு துணை ஆணை யர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்க றிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
மாணவர் அப்துல் ரஹீம் மீது பொய்யான எஃப்ஐஆர் பதிந்து, கொடூரமாக தாக்கி, சித்ர வதை செய்து சிறையில் அடைத்து மிகப் பெரும் மனித உரிமை மீறலை செய்து ள்ளனர். மேலும், மாணவரை அச்சுறுத்தி சமாதான வீடியோ வெளியிட வைத்ததோடு, ஆய்வாளர் நசீமாவை திட்டமிட்டே காப்பாற் ்றும் நோக்கில் 2 காவலரை மட்டும் சஸ் பெண்ட் செய்து பிரச்சனை முடிந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சித் ்தது. ஆனால் அனைத்து குற்றவாளிகள் மீதும் உடனடியாக எஃப்ஐஆர் பதிந்து, சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து ஆய்வாளர் நசீமா உள்ளிட்டு ஒன்பது பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை மாணவர் அப்துல் ரஹீமை சந்தித்து ஆறுதல் கூறியதோடு காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான தொடர் நடவடிக்கை முன்னெடுப்போம் என மாநிலச் ்செயலாளர் வீ.மாரியப்பன் கூறினார். தமிழக காவல்துறை உடனே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைரீதியாக மட்டும் இல்லா மல், சட்டத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட் ்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தமிழகம் முழுவதும் காவல்துறை ஆணை பிறப்பிக்க வேண்டும்.தமிழக அரசும் காவல்துறையின் வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ்வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.