tamilnadu

மதுரையில் தொற்று ஆயிரத்தை நெருங்குகிறது

மதுரை, ஜூன் 23- சென்னை, மதுரையைத் தொடர்ந்து விருதுநகர், தேனி மாவட்டங்களில் கொரோனாவின் தீவிரம் அதிகரித் துள்ளது.  செவ்வாய் மாலை ஆறு மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 64,603 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஜூன் 22-ஆம் தேதி 59,506 ஆக தொற்றுப் பரவல் 64,603 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று 2,478 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். மொத்த பாதிப்பில் சென்னையில் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாயன்று பாதிப்பு 1,380 ஆக உள்ளது. மதுரையில் 137 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள் ளது. விருதுநகரில் 26 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 234 ஆக உள்ளது. தேனியில் 48 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு 284 ஆக உள்ளது. சிவகங்கையில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 103 ஆக உள்ளது. இராமநாத புரத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். மொத்த பாதிப்பு 339 ஆக உள்ளது. திண்டுக்கல்லில் 44 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 357 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராம நாதபுரம் மாவட்டங்களில் தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு, தனிமைப் படுத்தல் ஏற்பாடுகளை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தேனியில் தொடரும் சர்ச்சை
தேனி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் பணியாற்றும் மதுரை யைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் இரண்டு நாட்க ளுக்கு முன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று வந்ததைத் தொடர்ந்து அந்த அலுவலக மும் மூடப்பட்டது. தேனி மாவட்டம் போடி காவல் சார்பு ஆய்வாளர் உட்பட 11 காவலர் களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட் டுள்ளது. தவிர உளவுத்துறை காவலர், சின்னமனூர் காவல் சார்பு ஆய் வாளர் ஆகியோரும் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தனி யாக சிகிச்சையளிக்க மாவட்ட ஆட்சி யரை மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ் கோரிக் கையை ஏற்கவில்லையென கூறப்படு கிறது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி தமது சொந்த முயற்சியில் தேனி வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியை கேட்டுப்பெற்று காவலர்களுக்கு சிகிச் சையளிக்க ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக ஜெய்ஹிந்த் புரம், அனுப்பானடி பகுதியில் கூடுதல் கண்காணிப்பு தேவை.

கொரோனா 70 பேர் மாயம்
மராட்டியத்தின் மும்பை மாநக ரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டு இருந்த 70 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந் நிலையில், அவர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பை மாநகராட்சி நிர் வாகம் மும்பை காவல்துறையின் உதவியை கோரியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போன அவர்களை மொபைல் போன் இருப்பிடம் மற்றும் சி.டி.ஆர். ஆகிய வற்றின் வழியே கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ள னர். மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான பின் சிகிச்சை பெறுவதற்கு பதிலாக, திடீரென 70 நோயாளிகள் காணாமல் போயுள்ளது பரபரப்பு ஏற் படுத்தி உள்ளது.

-நமது நிருபர்கள்