tamilnadu

img

விளையாட்டு...

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மீண்டும் ஒரே நாளில் வெற்றி

29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அபூர்வம்

கிரிக்கெட் உலகில் தனிநபர்கள் மற்றும் கோப்பை கைப்பற்றுதல் மூலமாக ஒரு நாடு பல சாதனை சம்பவங்கள் நிகழும். ஆனால் மூன்று நாடுகள் சேர்ந்து ஒரே நாளில், அதுவும் 2ஆவது முறையாக சாதனை படைத்துள்ள அபூர்வமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பிப்ரவரி 12ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி  பெற்றது. அதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  மேலும் பிப்ரவரி 12 அன்று இலங்கை அணி அதன் சொந்த  மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 2ஆவது முறையாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஒரே நாளில் வெற்றி பெற்றுள்ளன. இதற்குமுன் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் மார்ச் 6ஆம் தேதி அன்று இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஒரே நாளில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது