tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு

முதலமைச்சரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை, மே 10 - கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை யொட்டி, ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில்  ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களு டன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரை யாடல் நடத்தினார்.  பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.  ரவி, “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தான் 60 சதவீத மாணவர்கள் படிக்கிறார் கள். அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியை விட அது குறைவாக உள்ளது.  அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75 சதவீத மாண வர்களால், இரட்டை இலக்க எண்களைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40  சதவீத மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களைகூட படிக்க முடிய வில்லை. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி  வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு  படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு  ஆபத்தான நிலையை ஏற்படுத்தக் கூடி யது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு  பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள்” என்றெல்லாம் வன்மத்தை  கக்கினர். ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கல்வி யாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசும் பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, கல்வியின் தரத்தை  மேம்படுத்த மாவட்டந்தோறும் 24 பேர்  கொண்ட குழு அமைக்க ஆட்சியர் களுக்கு, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.  இந்நிலையில், முதன்முறையாக தமிழ்நாடு அரசு கல்வித் தரம்  பற்றிய ஆய்வறிக்கை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயல கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக்குழு துணைத் தலைவர் அறிக் கையை அளித்துள்ளார். ‘State level achievement survey’ குறித்த அறிக்கையை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அளித் தார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி  மாநில அளவிலான அடைவுத் தேர்வு  முடிவு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் முரு கானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஆய்வு கிட்டத்தட்ட 36 ஆயிரம் பள்ளிகளில் 9.80 லட்சம் மாண வர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், தமிழ், ஆங்கிலம், கணி தம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் தமிழ்நாட்டு மாண வர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருப்பது புள்ளி விவரங்களோடு கண்ட றியப்பட்டுள்ளது. இந்த அரசு செயல்படுத்தும், எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றால், தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரி மற்றும் மற்ற மாநி லங்களின் சராசரியை விட மேம்பட்டு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்து உள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு  என்பதைத் தொடர்ந்து உலகுக்கு உரக்கச்  சொல்வோம்! நம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை  நிற்போம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.