tamilnadu

img

பூண்டு கொள்முதல் விலை அதிகரிப்பு

உதகை, ஜூலை 22- நீலகிரி பூண்டு கொள்முதல் விலை அதிகரித்துள்ளாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தப டியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள் ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலி பிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட  மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கி லீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன் மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாகவும் உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் உள்ளூர் மட்டு மின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதி கள், ஊட்டி, குந்தா கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் விளைந்த பூண்டை அறுவடை செய்து, லாரிகள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.  இங்கு, பூண்டு வரத்து குறைவு காரணமாக மேட்டுப்பா ளையம் மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.200 வரை விற்ற நிலையில் தற்போது முதல்  தர பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது.

இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், குஜராத்  உள்ளிட்ட இடங்களில் பூண்டு அதிக அளவில் விளை கிறது. நாட்டின் ஒட்டு மொத்த பூண்டு தேவையில் 80  சதவீத பூண்டு இங்குதான் விளைவிக்கப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் நீலகிரி பூண்டு தனி சுவையுடன் இருப்ப தால் எப்போதும் விலை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த  ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கிலோ ரூ.70 வரை மட்டு மே பூண்டு ஏலம் போனதால் விவசாயிகள் விரக்தி அடைந் தனர். இதனால் இந்த ஆண்டு ஏராளமானோர் பூண்டு சாகு படியை நிறுத்திவிட்டு மாற்று சாகுபடிக்கு சென்று விட்ட னர். இதன்படி நீலகிரியில் வழக்கமாக சுமார் 1000 ஹெக்டேர்  பூண்டு விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 600 ஹெக்டேர் மட்டுமே பூண்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு நீலகிரியில் பூண்டு விளைச் சல் நன்றாக இருந்தாலும் குறைந்த சாகுபடி பரப்பளவு காரண மாக வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. அடுத்த  மாதம் அறுவடை தொடங்கும் வரை இந்த விலை உயர்வு  இருக்கும். இதற்கிடையே கர்நாடக பூண்டும் தற்போது கிலோ  ரூ.160-க்கும், தாளவாடி பூண்டு கிலோ ரூ. 220-க்கும் விற்பனை  ஆகிறது என்றார்.