விருதுநகர், மே 14- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், பாமாயில் மற்றும் அனைத்து பருப்புகளின் விலையும் திடீரென உயர்ந்துள் ளது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ.3 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனையானது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ. 100 உயர்த்தப்பட்டு தற்போது, 3 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற் கப்படுகிது. பாமாயில் கடந்த வாரம் ரூ.1480-க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் டின் ஒன் றுக்கு ரூ,40 உயர்ந்து, தற்போது ரூ,1520க்கு விற்பனையாகிறது, குண்டூர் வத்தல் கடந்த வாரம் 100 கிலோ ரூ.17ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந் தது. தற்போது குவிண்டால் ஒன் றுக்கு ரூ.2ஆயிரம் வரை குறைவு ஏற்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. மல்லி விலை கடந்த வாரம் 40 கிலோ ரூ.2800 முதல் 3 ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில்,
இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.3ஆயிரம் முதல் 3200க்கு விற்கப்படுகிறது. துவரம்பருப்பு 100 கிலோ கடந்த வாரம் புதுஸ் நாடு வகை ரூ.11ஆயி ரத்திற்கு விற்ற நிலையில் தற் போது ரூ,11ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது. இதேபோல் உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் ரூ,10800க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 200 உயர்ந்து ரூ,11ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதேவேளை தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்து ரூ.9600க்கு விற்பனை யாகிறது, பாசிப்பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.10 ஆயி ரத்து 100க்கு விற்பனையானது. இதேபோல் பாசிப்பயறு ( இந்தியா) நாடு 100கிலோ விலை யானது ரூ.7800க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.8 ஆயி ரத்திற்கு விற்பனையாகிறது. மசூர் பருப்பு( பருவட்டு) கடந்த வாரம் 100 கிலோ ரூ.10300க்கு விற்பனையானது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்து தற்போது ரூ.10800க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மசூர் பருப்பு உடைத்தது மூட்டை ஒன்றுக்கு ரூ,500 வரை உயர்ந்து தற்போது ரூ,10800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை எண்ணெய், பாமா யில், மல்லி மற்றும் பருப்பு வகை களின் விலை ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.