tamilnadu

490 கோவில்களின் அரசு மானியம் அதிகரிப்பு

சென்னை,டிச.27- குமரி மாவட்ட கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங் களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை உயர்த்தி, அதற்கான காசோலைகளை சுசீந்திரம் கன்னி யாகுமரி கோவில் இணை ஆணை யரிடம் முதலமைச்சர் வழங்கினார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க ப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட் டத்தை சார்ந்த செங்கோட்டை வட்டம் ஆகுய பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அப்பொழுது கன்னியாகுமரி தேவசம் போர்டு என்ற அமைப்பின் கீழ் 490 கோயில்களின் நிர்வாகம்  கொண்டு வரப்பட்டது. இக்கோயி ல்களுக்காக தற்போது ஆண்டு தோறும் வழங்கப்படும் அரசு மானிய மான 3 கோடி ரூபாய் கோயில்களின்  நிர்வாகம் மற்றும் இதர செலவினங்க ளுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்ட  கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்க ப்படும் அரசு மானியத்தினை 3 கோடி  ரூபாயில் இருந்து 6 கோடி  ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.