tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 390 புதிய தீக்கதிர் ஆண்டு சந்தாக்கள் சேர்ப்பு

புதுக்கோட்டை, செப்.26 - புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக சேர்க்கப்பட்ட 390 தீக்கதிர் ஆண்டு சந்தாகளுக்கான தொகையை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பேரவை ஞாயிற்றுக்கிழமையன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு  மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவரிடம் புதிதாக சேர்க்கப்பட்ட 390 தீக்கதிர் ஆண்டு சந்தாகளுக்கான தொகை வழங்கப்பட்டது. மேலும், வருகின்ற அக்டோபர் 1 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் 500 புதிய ஆண்டுச்சந்தாவுக்கான தொகை முழுவதையும் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்குவது எனவும் அறிவிக்கப்பட்டது. பேரவையில்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை எம்எல்ஏ., ஆகியோர் பேசினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், சி.சுப்பிரமணியன், ஜி.நாகராஜன், த.அன்பழகன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

;