நடப்பாண்டு குறுவைப் பருவத்திற் ்கான வேளாண் விளைப்பொருட்க ளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு அறிவித்தது. அறி விக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஆதார விலை என்பது உற்பத்தி செலவுகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைவானது. 712 ரூபாயை இழக்கும் விவசாயிகள் குறிப்பாக 2014 முதல் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரதமர் மோடி தலை மையிலான அரசு, தேசிய விவசாயிகள் ஆணையப் (வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம்) பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுகளோடு சேர்த்து 1.5 மடங்கு உயர்த்தி வழங்குவோம் என விவசாயிகளுக்கு உறுதியளித்தது (சி2+50). ஆனால் தற்போது வரை இந்த அடிப்படையில் வேளாண் விளைபொருட்களுக்கு விலை அறிவிக்காமல் விவசாயி களுக்கு ஒன்றிய அரசு துரோகம் செய்து வரு கிறது. சி2+50-ன் படி நெல்லுக்கு விலை அறிவிக்கப் பட்டிருந்தால் குவிண்டாலுக்கு 3012 ரூபாய் விலை கிடைத்திருக்கும். ஆனால் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள விலை குவிண்டாலுக்கு 2300 ரூபாய் மட்டுமே. இதன் மூலம் ஒரு குவிண்டாலுக்கு விவசாயி கள் 712 ரூபாயை இழக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நெல் குவிண்டாலு க்கு 2500 ரூபாய் விலை கொடுப்போம் என்று கூறியிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கவில்லை. குறிப்பாக நடப்பாண்டு ஒன்றிய அரசு அறிவித்துள்ள விலையோடு சேர்த்து தமிழ்நாடு அரசு தனது பங்காக ஊக்கத்தொகையை பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு 105 ரூபாயும், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு 130 ரூபாயும் மட்டுமே உயர்த்தியுள்ளது. விவசாயிகளுக்கு இது திருப்தியளிக்கவில்லை. கடந்தாண்டு மாநில அரசு பொதுரகத்திற்கு குவிண்டாலுக்கு 82 ரூபாயும், சன்னரகத்திற்கு 105 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கியது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஊக்கத்தொகை பொதுரகத்திற்கு குவிண்டாலுக்கு 23 ரூபாயும், சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 25 ரூபாய் மட்டுமே என்பது விவ சாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. உற்பத்திச் செலவுகள் மிக அதிகமாக அதிகரித்து வரும் சூழலில் குவிண்டாலுக்கு 3000 ரூபாய் விலை கிடைத்தால் தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு கட்டுபடியாகும். மாநில அரசின் அறிவிப்பு அதற்கு ஏற்றார்போல் இல்லை. இந்தியாவில் வேறு சில மாநிலங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2840 முதல் ரூ.3100 வரை வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசின் தற்போதைய அறிவிப்பை மறுபரிசீலனை செய்து நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.