tamilnadu

img

விஐடி பல்கலைக்கழகத்தில் மாணிக்க விழா புதிய மாணவியர் விடுதிகள் திறப்பு

வேலூர், நவ.13 – விஐடி பல்கலைக்கழக மாணிக்க  விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்த சாமி டவர், சரோஜினி நாயுடு மாணவி யர் விடுதி தொடக்க விழா விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை யில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராஜம்மாள் கோவிந்தசாமி டவர் மற்றும் சரோஜினி நாயுடு மாணவர் விடுதியை திறந்து வைத்தார். மேலும், மாணிக்க விழா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் கிராமத்தில் உள்ள வர்களுக்கும் அடிப்படைக் கல்வி,  மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது.  அதனால் கல்வி, மருத்து வத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்றார். தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்்தில் அதிக கவனம்  செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தனிமனித வெற்றி விழாவுக்கு முன்னிலை வகித்த அமைச்சர் துரைமுருகன், ஒரு கல்லூரி யாக தொடங்கிய இன்றைக்கு உலகம் முழுவதும் புகழ் பெற்ற பல்லைக் கழக மாக விளங்குகிறது. இதற்கு முழு கார ணமும் விசுவநாதன் என்ற தனிமனித னின் வெற்றி என்று தான் என்றார். சிலரிடமே குவியும் வளர்ச்சி விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பேசு கையில்,  நாடு வளர்ந்த நாடாக உயர உயர்கல்வி மிகவும் அவசியம். ஆனால், இந்தியாவில் உயர் கல்விக்கு பெற்றோர்கள் மட்டுமே அதிக அளவில் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. தேசமயம், கல்விக்காக அரசு செலவழிப்பதில் உலகளவில் இந்தியா 155வது இடத்தில் உள்ளது. தனிநபர் வருமானத்தில் 136 இடத்தில் உள்ளது. இதனால், வளர்ச்சி என்பது ஒரு சிலரிடம் மட்டுமே குவிகிறது என்றும் அவர் தெரிவித்தார். விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.செல்வராஜ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், வி.ஐ.டி துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவ நாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வர வேற்றார். முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார்.