சென்னை,அக்.15- நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பிஜெ. அப்துல் கலாமிற்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப் பட்டுள்ள கலாம் சிலையை அக்.15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.